மிதுனம் :
மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் ராசியிலேயே ஆட்சி வலுவுடன் இருக்கிறார்.
மிதுனத்திற்கு இது மேன்மையான மாதம்தான். ஜூலை மாதத்தில் உங்களுக்கு
எல்லாவிதத்திலும் நன்மைகள் மட்டுமே இருக்கும். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து,
கௌரவம், தொழில் மேன்மை, தன லாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நன்மைகள்
உண்டு. மனக்கவலைகள் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள் தடைகள் போன்றவைகள்
தீரும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். எந்த
ஒரு செயலையும் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களுடைய
பேச்சை அனைவரும் கேட்பார்கள்.
இரண்டு, எட்டில் ராகு கேதுக்கள் இருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் ஒருமுறை ராகு
பகவான் பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம்,
கொடுமுடி போன்ற புனிதத்தலங்களுக்கு சென்று பரிகாரங்களை செய்வது நல்லது.
சிலருக்கு மாத முற்பகுதியில் நல்ல பலன்கள் இருக்கும். பிற்பகுதியில் சிறிது
அலைச்சல்கள், காரியத் தடங்கல்கள் இருந்தாலும் மாதம் முடிந்த பிறகு அனைத்தும்
நல்லவிதமாக முடிவுக்கு வரும். சிலருக்கு கோவிலுக்கு போவதும் நேர்த்திக்
கடன்களை நிறைவேற்றுவதும் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் உண்டு.
குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும்
உற்சாகமாக ஈடுபடுவீர்கள். சிலர் நல்ல வீட்டில் குடி போவீர்கள். பணவரவு
இருக்கும். பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள்
நன்மைகளை அடைவீர்கள் திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்களுக்கு
முன்னேற்றங்கள் உண்டு. வாழ்க்கைத்துணை விஷயத்தில் கருத்து வேறுபாடுகள்
விலகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவீர்கள். பங்குதாரர்களிடம் சுமுகமான
உறவு இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள். அலுவலகத்தில்
இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நல்லபடியாக முடியும். அனாவசிய செலவுகள்
கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சனைகள் தொந்தரவுகள் தராது.
4,8,9,12,14,18,21,22,26,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம்தேதி அதிகாலை
4.12 மணி முதல் 29-ந்தேதி மாலை 5.06 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுவது நன்மையை
தரும்.
No comments :
Post a Comment