மேஷம் :
மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் உச்ச வலுவில் உள்ளதாலும், ராசிக்கு குரு
பார்வை இருப்பதாலும் மேஷராசிக்கு இது சந்தோஷங்களைத் தரும் மாதம்தான். ஒரு
குறிப்பிட்ட பலனாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை
இழந்து எரிச்சல் படுவீர்கள். கோபத்தைப் பற்றி குறிப்பாகச் சொல்கிறேன் என்றால்
அதில் அர்த்தம் இருக்கிறது. ஏற்கனவே கோபக்காரராகிய நீங்கள் தற்போது ராசிநாதன்
செவ்வாய் உச்ச நிலையில் இருப்பதால் இன்னும் அதிகமான கோபத்திற்கு ஆளாக கூடிய
சில சம்பவங்கள் நடக்கும். எதிலும் அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது.
ஏதாவது தவறாக நடந்த பிறகு வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை.
இதுவரை செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு இப்போது நல்ல மாற்றங்கள் நடைபெறும்.
முப்பது வயதுகளில் இருப்பவர்கள் மாற்றங்களைச் சந்திப்பீர்கள். சாப்ட்வேர்,
கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு முன்னேற்றமான நிலைமைகள்
இருக்கும். பத்தாமிடம் பலம் பெற்று அமைவதால் தொழில், வேலை, வியாபாரம்
போன்றவைகள் சிறப்பாக நடைபெறும். அரசுப்பணியாளர்கள், மருத்துவம், விளையாட்டு,
காவல்துறையினர், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல்
எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் மிகுந்த நன்மைகளைப்
பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு இது அமோகமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை
விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம். கணவன், மனைவி உறவு நன்றாக
இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும்.
தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். ஒருசிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.
மேஷநாதன் செவ்வாய் நல்லநிலையில் இருப்பதால் ஜூலை மாதம் எவ்வித கெடுதல்களையும்
செய்யாது. தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இருக்காது. தொழில் நல்லபடியாக
நடக்கும். வியாபாரம் பெருகும். கடந்த காலங்களில் இருந்த சிக்கல்கள் இனிமேல்
இருக்காது.
1,3,7,8,10,11,17,18,20,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம்தேதி அதிகாலை 4.16
மணி முதல் 24-ம்தேதி மதியம் 3.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும்
செய்யும் முன் ஒன்று இரண்டாக யோசிப்பது நல்லது.
No comments :
Post a Comment