மேஷம் :
பங்குனி மாதம் முழுவதும் ராசியில் ஒரு சுபக் கிரகம் இருப்பதும், ராசியை
இன்னொரு சுபக் கிரகம் பார்ப்பதும் நன்மைகளை தருகின்ற அமைப்பு என்பதால் தொழில்
மற்றும் சொந்த வாழ்க்கையில் இதுவரை நன்மைகளை சந்திக்காத மேஷராசிக்காரர்களுக்கு
நல்ல முன்னேற்றத்தை தருகின்ற மாதமாக பங்குனி இருக்கும். அஷ்டமச் சனி
முடிந்தும் இதுவரை நல்லபலன்கள் நடைபெறாத உங்களில் சிலருக்கு அந்த குறை
நீங்கும் மாதம் இது.
பொது வாழ்க்கையில் இருக்கும் சிலருக்கு இப்போது பதவிகள் உண்டு. ராசிநாதன்
செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வது யோகம் என்பதால் பணவரவில் குறை
இருக்காது. தொழில் விஷயங்களில் கவலைகள் எதுவும் இல்லாமல் நன்மைகள் மட்டுமே
இருக்கும். சூரியன் விரயத்தில் வலுப் பெறுவதால் சிலருக்கு தந்தைவழி உறவினர்கள்
வகையில் விரயங்கள் இருக்கும். தந்தை வழியில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம்.
வெகுநாட்களாக இருந்து வரும் பிரச்னைகளை வெற்றி கொள்வீர்கள்.
சுக்கிரனின் அமைப்பால் பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும்,
சச்சரவுகளும் இருக்கும். அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள்,
காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் உண்டு. எதிர்ப்புகள்
விலகும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். என்னதான் பிரச்னை
என்றாலும் ராசியை குரு பார்ப்பதால் வரும் அனைத்து கஷ்டங்களும் சூரியனைக் கண்ட
பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி. கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது.
ரிஷபம்:
மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் உச்சநிலையில் இருப்பதும், அதன்பிறகு
குருவின் பார்வையில் இருப்பதும் ரிஷப ராசிக்கு தடைகளை விலக்குகின்ற ஒரு
அமைப்பு என்பதால் இதுவரை வேலை, தொழில் போன்ற விஷயங்களில் நல்ல பலன்கள் நடக்காத
ரிஷப ராசிக்காரர்கள் இப்போது அந்தக்குறை நீங்கப் பெறுவீர்கள். அதேநேரத்தில்
அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தில் நீங்கள் இருப்பதால் புதிய தொழில் முயற்சிகளை
ஆரம்பிக்காமலும், இருக்கும் வேலையை விட்டு நீங்களாக விலகாமலும் இருப்பது
நல்லது.
ராசிநாதனே ஆறாம் அதிபதியாகி ஆறாமிடத்தைப் பார்ப்பதால் பங்குனி மாதம் ரிஷப
ராசிக்கு எதிர்ப்புகள் லேசாக தலைதூக்கும் மாதமாகவும் அடங்கிக் கிடந்த சில
பிரச்னைகள் உள்ளேன் அய்யா என்று எட்டிப் பார்க்கும் மாதமாகவும் இருக்கும்.
ராசிநாதனை குரு பார்க்கும் நிலையில் இருந்தாலும் அவர் வக்கிரமாக இருப்பது
பலவீனம் என்பதால் இந்த மாதம் உங்களுக்கு நல்லதும், கெட்டதும் கலந்த பலன்கள்
உண்டு. பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும்.
சிலருக்கு சகோதரிகளால் செலவு உண்டு. ஒருசிலர் ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு
காட்டுவீர்கள். திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். குடும்பப்
பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு
பேச வேண்டாம். கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும்.. தாய் வழி
உறவினர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு தேவையற்ற விரோதங்கள்
வரலாம். எவரையும் நம்பி வெளிப்படையாக பேச வேண்டாம்.
மிதுனம்:
மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் நீசநிலையில் இருந்தாலும் பெரும்பகுதி நாட்கள்
அவர் வக்ர அமைப்பில் இருப்பதால் உச்சவலு உண்டாகி மிதுனத்திற்கு நன்மைகளை
தருகின்ற மாதமாக பங்குனி இருக்கும். குறிப்பாக 30 வயது கடந்தும் திருமண
அமைப்புகள் கூடி வராத இளைய பருவத்தினருக்கு இந்த வருடத்திற்குள் திருமணம்
நடந்து வாழ்க்கை செட்டில் ஆவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இப்போது உண்டு.
உங்களில் சிலர் விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள்.
வியாபாரிகளுக்கு இந்தமாதம் சில விரயங்கள் ஏற்படும். ஆனாலும் வருமானம்
குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசுத்துறையினருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுப
காரியங்கள் நடக்கும். கோர்ட், போலீஸ் என்று அலைபவர்களுக்கு சாதகமாக முடிவுகள்
வரும். சிலர் சமரசம் ஆவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். பொருளாதாரம் மேன்மை
பெறும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவர்கள் நன்கு பரீட்சை எழுதுவீர்கள். தாயார் வழியில் நன்மைகள் நடக்கும்.
வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இருக்கும். ஒரு சிலர் வீடு
கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான நீங்கள் நினைத்த வாகனம் அமையும். தாயாரிடம்
ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியான நேரம் என்பதால் இந்த
நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். சிலருக்கு பயணங்களும், அது சம்மந்தமான
நன்மைகளும் இருக்கும்.
கடகம்:
மாதம் முழுவதும் தனாதிபதியான சூரியன் ஒன்பதாமிடத்தில் இருப்பதும்,
எதிர்ப்புகளை குறிக்கும் ஆறாமிடத்தில் செவ்வாய், சனி இணைந்திருப்பதும்
கடகத்திற்கு யோகமான அமைப்பு என்பதால் பங்குனிமாதம் கடகராசிக்கு நல்ல பலன்
தருகின்ற மாதமாக இருக்கும். குறிப்பிட்ட ஒரு பலனாக ஆறாமிடம் பாபக் கிரக
ஆளுமையினால் பாதிக்கப்பட்டிருப்பதால் இதுவரை உங்களை தொல்லைப் படுத்திக்
கொண்டிருந்த கடன்களை நீங்கள் தீர்ப்பதற்கான வழிகள் பிறக்கும் மாதம் இது.
பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். வேலை
செய்யும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் தீரத் தொடங்கி நல்லது அனைத்தும்
நடக்கும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.
அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இதர
வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம்
உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள்.
வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளின் அதிபதியான செவ்வாய் வலுவுடன்
இருப்பதால் பண விவகாரங்கள் நல்லவிதமாக செயல்பட்டு நன்மைகளை தரும்.
வியாபாரிகளுக்கு இது மேன்மைகளைத் தரும் மாதம். கொடுத்த கடன் திரும்பி வரும்.
நீண்டநாள் பாக்கி வசூல் ஆகும். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். சிலருக்கு
எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான நிகழ்ச்சிகள் நடக்கும்.
வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் உண்டு.
சிம்மம்:
நான்காமிடத்தில் இருந்து தொழில் ஸ்தானத்தை பார்வையிடும் குருபகவானின் தயவினால்
வேலை, தொழில் போன்றவைகளில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி நன்மைகள் மட்டுமே
நடக்கும் மாதம் இது. கடந்த மூன்று வருடங்களாக அலுவலகங்களில் இருந்து வந்த
தொல்லைகள் இந்த மாதம் முதல் நிரந்தரமாக விலகும். சொந்தத் தொழில்
வைத்திருந்தும் இதுவரை எவ்வித முன்னேற்றத்தையும் காணாத சிம்ம ராசியினருக்கு
நல்ல மாற்றங்களை தரும் மாதம் இது.
அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். வேலை இல்லாமல்
இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்கள் நன்கு பரீட்சை
எழுதுவீர்கள். கலைஞர்களுக்கு இது சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு,
தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன்
இருக்கும். பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. தந்தைவழி
உறவினர்களிடமிருந்து உதவிகள் இருக்கும்.
ராசிநாதன் குருவின் வீட்டில் இருப்பதால் சீருடை அணியும் துறைகளான ராணுவம்,
காவல்துறை, பாதுகாப்பு போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வேலையில்
இதுவரை இருந்துவந்த சிக்கல்கள் நீங்குதல், வழக்குகள் சாதகமாகுதல் மற்றும்
பொருளாதார மேன்மைகள் இருக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை
மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில்
சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.
கன்னி :
மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் நீசநிலையில் இருந்தாலும் அவர் நீசவக்ரம்
பெற்று ராசியை பார்ப்பதால் அதிக வலிமை எனப்படும் உச்ச அமைப்பில் இருக்கிறார்.
கன்னிக்கு நல்லவைகள் மட்டுமே நடக்கின்ற மாதம் இது. அதே நேரத்தில்
நான்காமிடத்தில் இரண்டு பெரும் பாபக் கிரகங்களான செவ்வாயும், சனியும் இணைந்து
தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் உங்களில் சிலர் அலுவலகங்களிலும், தொழில்
இடங்களிலும் பின்னடைவான ஒரு நிலையை உணர்வீர்கள்.
சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு எல்லோரும்
ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. திருமண
ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.
இரண்டாமிடத்தில் குரு வலுப் பெறுவதால் சிலர் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள்
செய்வீர்கள். புனிதத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு
ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல்
இருக்கும்.
ராசிநாதன் வலுவாக இருப்பதால் தொல்லைகள் எதுவும் அண்டாது. எந்த ஒரு சிக்கலையும்
அறிவாற்றலால் சுலபமாக சமாளிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள்
தீரும். அதிர்ஷ்டம் கொஞ்சம் அருகில் இருக்கும். அரசு, தனியார் துறை ஊழியர்கள்
நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக வரிவசூல் துறையினருக்கு நல்லவை நடக்கும்.
விவசாயிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும்
பிற்பகுதியில் நல்ல பலன்களும் உண்டு.
துலாம் :
மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் பரிவர்த்தனை அமைப்பில் ராசியில்
இருக்கும் நிலை பெறுவதும், பிற்பகுதியில் ஏழாமிடத்திற்கு மாறி ராசியை
பார்ப்பதும் துலாமிற்கு சிறப்பான பலன்களை தரக்கூடிய ஒரு கிரக நிலை என்பதால்
பங்குனி மாதம் சந்தோஷ மாதம் என்று நீங்கள் சொல்லும் மாதமாக இருக்கும். இதுவரை
சொந்த வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டிருப்பவர்களுக்கு நிலையான
முன்னேற்றம் கிடைப்பதற்கு அடிப்படை அமைப்புகளை தரும் மாதம் இது.
ராசிநாதன் வலுவாக இருப்பது நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் வேலை, தொழில்,
வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முன்னேற்றங்களும், பணவரவுகளும்,
லாபங்களும், இருக்கும். மாதத்தின் பெரும்பாலான நாட்கள் புதன் நீசநிலையில்
இருந்தாலும் வக்ரத்தில் இருப்பதால் நீசபங்கம் உண்டாகி நன்மைகள் உண்டு.
செவ்வாய் வலுப்பெறுவதால் ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற
துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில்
செல்லும்.
வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு,
தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம்
மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். ராஜ கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால்
வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு
திருமணம் உறுதியாகும். துலாத்திற்கு இனிமேல் யோகம்தான் நட்புக்கிரகங்கள்
வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட
முடியும்.
விருச்சிகம் :
எட்டுக்குடைய புதன் நீசவக்கிர நிலையில் இருப்பதும், அவருடன் மாதம் முழுவதும்
ஜீவனாதிபதி சூரியன் ஐந்தாமிடத்தில் இணைந்திருப்பதும் எதிர்பாராத சில அதிர்ஷ்ட
நிலைகளை விருச்சிகத்தினர் சந்திக்கும் ஒரு கிரக அமைப்பு இருப்பதால் பங்குனி
மாதத்தில் விருச்சிகத்தினருக்கு சில இன்ப அதிர்ச்சி தரும் இனிமையான
திருப்பங்கள் இருக்கும். விருச்சிகத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீருகின்ற
நிலைகள் உருவாகி, இனி சிக்கல்கள் இல்லாத வாழ்க்கை இருப்பதற்கு ஆதாரமான சில
சம்பவங்கள் நடக்கும் மாதம் இது.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை
விலகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை
அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை
செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும்.
பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம்.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி
தீர்த்துக் கொள்வது நல்லது.
இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்த அனைத்து விஷயங்களும் முடிவுக்கு
வந்து கொஞ்சம் நிம்மதிக்கு வழிவகுக்கும். ராசிநாதனின் வலிமையால் எதையும்
சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். விருச்சிகராசிக்காரர்கள் பட வேண்டிய
கஷ்டங்கள் அனைத்தையும் பட்டு விட்டீர்கள். இனிமேல் உங்களுக்கு சோதனைகள்
உறுதியாக இருக்காது. சென்ற வருடத்தோடு எல்லாம் போய் விட்டது. இனி நீங்கள்
யாருக்காகவும் எந்த விஷயத்திற்காகவும் கலங்கத் தேவையில்லை.
தனுசு :
ஜீவனாதிபதி புதன் நீசவக்கிர அமைப்பில் பத்தாமிடத்தை பார்ப்பதும், ராசியிலேயே
சனி, செவ்வாய் இணைந்திருப்பதும் தனுசுராசி இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில்
அமைப்பில் சங்கடங்களை தருகின்ற அமைப்பு என்பதால் இந்த மாதம் 40 வயதிற்குட்பட்ட
தனுசுவினர் எதையும் பொறுமையுடன் கையாள வேண்டிய மாதமாக இருக்கும். உங்களில் மூல
நட்சத்திரக்காரர்கள் என்னவென்று தெரியாத இனம் புரியாத பரபரப்புடனும்,
கலக்கத்துடனும் இருப்பீர்கள். எதிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
சுக்கிரன் வலுப்பெறுவதால் தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள்
உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு
மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும். செவ்வாய் வலுவுடன்
இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. செலவுகள் செய்ய வேண்டிய
கட்டாயம் இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணம் வேண்டுமே எனவே
வருமானமும் இந்தமாதம் தாராளமாகவே இருக்கும்.
ராசியில் இருக்கும் செவ்வாய் சனி இருவரும் பெண்களால் எரிச்சலையும், அவர்கள்
மூலமான எதிர்மறைபலன்களையும், செலவுகளையும் தருவார் என்பதால் எதையும்
ஒருமுறைக்கு இரண்டு முறையாக யோசித்து செய்யுங்கள். குடும்பத்தில் ஏற்படும்
பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.
நீண்டநாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் அவரை நேரில் சென்று
பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது சிறப்புகளைச் சேர்க்கும்.
மகரம் :
மாதம் முழுவதும் மூன்றாமிடத்தில் ஒன்பதுக்குடைய பாக்கியதிபதி புதன் நீச வக்ர
அமைப்பில் இருப்பது உங்களுடைய தைரியத்தையும், வீரியத்தையும் சற்று அசைத்து
பார்க்கும் அமைப்பு என்பதால் மகரத்தினர் சுற்றி இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டிய மாதம் இது. நம்பிக்கைக்குரிய ஒருவர் அதற்கு எதிராக நடக்கும்
அமைப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தையும் அடுத்தவரை நம்பாமல் நீங்களே தீர
ஆராய்ந்து செய்ய வேண்டிய மாதமாக இது இருக்கும்.
புதன் நீசமாக இருந்தாலும் நீசபங்கமாகி இருப்பதால் நல்லபலன்கள்தான் நடக்கும்.
சிலருக்கு தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். பணியில்
இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு
கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். ஏழரைச்சனி நடப்பில் இருப்பதால்
சிலர் மட்டும் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்த நிலை
சிறிது நாட்கள்தான்.
ஆறாமிடம் வலுப் பெறுவதால் சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது
வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன்
வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து
நன்மைகளும் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை
ஆரம்பங்கள் இப்போது நடக்கும். கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு
அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்பு கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்
கும்பம் :
எட்டுக்குடைய புதன் நீசவக்ரம் பெற்று அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதும்,
வாழ்க்கைத்துணையைக் குறிக்கும் ஏழுக்குடையவன் மாதம் முழுவதும் நீசனுடன்
இணைவதும் இந்த மாதம் கும்பராசிக்கு குடும்பத்தில் சிறு சச்சரவை தரக் கூடிய
அமைப்பு என்பதால் கும்பத்தினர் நிதானமாக இருக்க வேண்டிய மாதம் இது.
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருபலனாக உங்களில் சிலர் “ஓவர் கான்பிடன்ட்”
எனப்படும் அதீத தன்னம்பிக்கையால் நன்றாக செல்லக் கூடிய விஷயங்களை கெடுத்துக்
கொள்வீர்கள்.
ஐந்தாமிடத்தை செவ்வாய் சனி இருவரும் பார்ப்பதால் பிள்ளைகள் விஷயத்தில்
சங்கடங்கள் இருக்கலாம். பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. தனாதிபதி
வலுத்திருப்பதால் எதிர்பாராத பணவரவு இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும்.
வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவீர்கள். பொதுவாழ்வில் அக்கறையும், நேர்மையான
எண்ணங்களையும் கொண்டவர்களான உங்களுக்கு இந்த மாதம் நல்ல திருப்பங்கள்
இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. எதிரி என்று நினைத்தவர்கள் கூட
நண்பர்களாக மாறுவார்கள்.
பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
வியாபாரிகளுக்கு லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். ராசிநாதன்
பலம் பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. கடன்
தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். தொழில், வேலை, வியாபாரம்
போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். பங்குனிமாதத்தில் கும்பத்தினர்
கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
மீனம் :
மாத ஆரம்பத்தில் பரிவர்த்தனையில் இருக்கும் ராசிநாதன் குருபகவான் மாத
பிற்பகுதியில் எட்டுக்குடைய சுக்கிரனின் பார்வையை பெறுவதால் இந்த மாதம் மீன
ராசிக்காரர்கள் எதிலும் துணிந்து இறங்கி ரிஸ்க் எடுக்கும் மாதமாக இருக்கும்.
உங்களில் சிலருக்கு குருட்டு அதிர்ஷ்டம் வேலை செய்யும். தவறாக ஒரு விஷயத்தை
ஆரம்பிப்பது போல் தெரிந்தாலும் பாதியில் சுதாரித்துக் கொண்டு அதை நீங்கள்
வெற்றியாக முடிக்கும் மாதம் இது.
சனி ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் பெண்கள் எவரிடமும் வாக்குவாதம் செய்ய
வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக
இருக்கவும். பண விஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை
செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும் என்பதால்
சிக்கனத்தை கடைப்பிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள்
வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை
ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக பதவிஉயர்வு, சம்பள உயர்வு,
நிலுவையில் நிற்கும் பாக்கித்தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும்.
நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை
நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது சிறப்புகளைச்
சேர்க்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து
கொள்ளுங்கள்.
என்னை அருகில் இருந்து பார்த்து பலன் சொல்வது போல் இருக்றது அய்யா....
ReplyDelete