இந்தக் மாதம் உங்களுடைய வேலை தொழில் வியாபார அமைப்புக்கள் சிறப்பாக நடைபெறும்.
குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம்
சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள்
நடக்கும் வேலையில் பாராட்டப் படுவீர்கள். பொருத்தமான வேலை தேடிக் கொண்டிருந்த
இளைய பருவத்தினருக்கு அவர்கள் தகுதிகேற்ற வேலை கிடைக்கும். வேலையில்
இருப்பவர்களுக்கு இதுவரை வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பொதுவில்
பிப்ரவரி மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான்.
பரணி
மாதத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்லபலன்கள் உங்களுக்கு நடக்கும். என்னதான்
பிரச்னைகள் இருந்தாலும் பண வரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே
எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம்
நேசமாக இருப்பார்கள். இந்த மாதம் அறிமுகமாகும் ஒருவர் வாழ்நாள் முழுவதும்
உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக்
கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை
இருந்து வந்த கவலைகள் இந்தமாதம் தீரும்.
கிருத்திகை
கையில் இருந்த சேமிப்பு கரையும் மாதமாக இது இருக்கும். அதேநேரத்தில்
வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும். எதிர்கால
நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இப்போது உங்களுக்கு
நடக்கும். நீங்கள் நேர்மையான வழிகளையே கடைப்பிடிப்பவர் என்பதால் தனயோகம்
முழுமையாக உண்டு. தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள். வருமானத்தை
சேமிக்க முயற்சி செய்யுங்கள். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன்
தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். பொதுவில் நன்மைகள் மட்டுமே
உள்ள மாதம் இது.
ரோஹிணி
இந்தமாதம் நல்ல லாபங்கள், பணவரவுகள் கிடைக்கும். வீடு வாகன விஷயங்களில் புதிய
மாற்றங்கள் இருக்கும். சொந்த வீடு புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள்
இருக்கும். இதுவரை அடுத்தவரை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள்
மற்றவர்களுக்கு உதவுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் நல்ல சம்பவங்கள்
இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அக்கவுண்டண்டுகள்,
கணிப்பொறித்துறையினர், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர் காண்ட்ராக்டர்கள்,
நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு
இது நல்ல மாதம்.
மிருகசீரிடம்
உங்களுக்கு இந்த மாதம் நல்ல பணவரவைத் தரும். குறிப்பாக எலக்ட்ரிக்கல் மற்றும்
எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே
அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
குழந்தைப்பேறு தள்ளிப் போன தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பாக்கியம் உண்டு.
இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும்.
பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக்
கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம்
நிரந்தர வருமானம் வரும்.
திருவாதிரை
வாழ்க்கைத்துணை மூலம் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக அமையும். கணவன் மனைவி
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக
அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்தவும்
செய்வீர்கள். இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு
மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில்
இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்ல மாதமாகும்.
புனர்பூசம்
வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது.
வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட
வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு
வாய்ப்பிருக்கிறது. கறுப்புநிறப் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ஆலைத்
தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் போன்றவர்களுக்கு மனது
சந்தோஷப்படும் நிகழ்ச்சிகள் நடைபெறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய
கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக
இருக்க முடியும். தொழில் ரீதியான பயணங்கள் இருக்கும்.
பூசம்
பணம் சம்பாதிப்பதில் இந்த மாதம் உங்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். எதையும்
சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.
சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. இம்முறை நீங்கள் தரிசிக்க
விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும். இந்த
மாதம் நல்ல வருமானங்களும், ரொம்ப நாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள்
நிறைவேறுதலும், திருமணம், குழந்தைபிறப்பு, வீடு வாங்குதல் போன்ற
சுபநிகழ்ச்சிகளும் குடும்பத்தில் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில்
இடமாற்றம் போன்றவைகள் ஆரம்பத்தில் நடக்கும்.
ஆயில்யம்
பொதுவாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள்
விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். பத்திரிக்கை,
ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக
இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும் என்றாலும்
பணவரவு தடைபடாது. சமீபத்தில் தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல்
சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால்
பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
மகம்
பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இந்த மாதம் நல்ல பலன்களைத் தரும்.
எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம்.
பணத்திற்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.
வாக்கு பலிக்கும். கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு
சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத்தருபவர்கள், நீதித்துறையில் பணிபுரிபவர்கள்,
மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி
சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்த மாதம் மிகுந்த நன்மைகளைத் தரும்.
பூரம்
இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள். அரசு
ஊழியர்களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.
பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக
மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக வீடு
கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு
வீட்டுக்கனவு நனவாகும். பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ
வாங்கவோ செய்வீர்கள். பொதுவாக நினைக்கும் அனைத்தும் நிறைவேறும் மாதம் இது.
உத்திரம்
இந்த மாதம் ஆசிரியர்பணி, மார்கெட்டிங், விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ரியல்
எஸ்டேட் தொழிலர்கள், ஆலோசனை சொல்பவர்கள், ஊராட்சி நகராட்சி மாநகராட்சி
சம்பந்தப்பட்டவர்கள், இன்சூரன்ஸ், வெரிபிகேசன் துறை, தபால் மற்றும்
கூரியர்துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள். இதுவரை உங்களுக்கு
தொல்லை கொடுத்த அனைத்துப் பிரச்னைகளும் இந்த மாதம் முதல் தீரப்போகின்றன. புதிய
நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள்
எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். பொதுவில் குறைகள் இல்லாத மாதம்
இது.
அஸ்தம்
மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல்
எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கனவே வேலையில் நிம்மதியற்ற நிலைமையையும், தொந்தரவுகளையும் சந்தித்தவர்கள்
இனிமேல் அது நீங்கி அலுவலகங்களில் நிம்மதியான சூழல் அமையப் பெறுவீர்கள்.
உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப்
புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள். இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப்
பாதையில் செல்லத் துவங்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள்.
சித்திரை
அரசுத்துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி
இருக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர்
ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல
திருப்பங்களைக் காண்பீர்கள். இதுவரை அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை
மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்
தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள்,
மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த மாதம் யோகத்தை
தரும்.
சுவாதி
பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் கவனத்துடன் இருங்கள்.
சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இது லாபம் தரும்
மாதம்தான். அதேநேரத்தில் தொழில் நன்றாக நடந்தாலும் பண வரவை தடுக்கப்படும்
என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. இந்த மாதம் வாழ்க்கைத்துணையின்
பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்லதொகையோ கிடைக்கும் வாய்ப்பு
இருக்கிறது. ரியல்எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், செம்மண்
பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை
அடைவீர்கள்.
விசாகம்
மாத ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து
நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம்
போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும். நீண்ட நாட்களாக
இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு
கிடைக்கும். அலுவலகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின்
தொழிலைச் செய்பவர்கள், மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ்,
அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள்.
அனுஷம்
இனிமேல் உங்களுக்கு எதிலும் கெடுதல்கள் இல்லை. இந்தமாதம் முதல் எல்லா
விஷயத்திலும் நன்மைதான். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள்
இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே இந்தமாதம் முதல் வெற்றி
பெறும். கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி
வேண்டாம். மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட
வேண்டாம். ஜென்மச்சனி கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் அனுஷத்திற்கு
பிரச்னைகளில் இருந்து விடுதலை உண்டு. பொதுவில் நல்ல மாதம் இது.
கேட்டை
இந்த மாதம் பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும்
இல்லாமல் நிம்மதி இருக்கும். இதுவரை விழிப்புடனும், மனக்கட்டுப்பாடுடனும்
இருந்ததன் மூலம் கஷ்டமான ஏழரைச்சனி காலத்தை சமாளித்து வருகிறீர்கள். கஷ்டங்கள்
இன்னும் சில மாதங்கள்தான். அதன்பிறகு துன்பங்கள் எந்த நிலையிலும் உங்களை
அணுகாது. காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு
மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்தமாதம்
பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம்
வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.
மூலம்
ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இந்த மாதம் கை கொடுக்காது.
சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க
வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். தாயாரின்
நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். வெளி மாநிலத்தவர்கள்
இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.
தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். இதுவரை
வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைய பருவத்தினர் மனதிற்கு பிடித்தமான
விரும்பிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள்.
பூராடம்
இந்த மாதம் பணவரவு நன்றாக இருக்கும். வருமானத்திற்கு எந்த வித குறையும்
இருக்காது. சேமிப்பு என்பதை மனதில் இருத்தி கொஞ்சமாவது சேமித்தீர்களானால்
வாழ்க்கையில் ஆனந்தம்தான். உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்டவர்கள் நல்ல
நன்மைகளைப் பெறுவீர்கள். மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின்
ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. இம்முறை நீங்கள் தரிசிக்க விரும்பும்
புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும். நீண்டகால
லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
உத்திராடம்
கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை
இழந்திருந்தவர்களுக்கு இந்தமாதம் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத்
தரும். இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும்
உங்களிடம் தலையெடுத்து அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே
சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள். சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு
இப்போது பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில்
பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதிகாரம் செய்யும்
துறைகளில் இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு
திருவோணம்
அலுவலகங்களிலும், தொழில் அமைப்புகளிலும் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள்
அகலும். போட்டியாளர்கள் விலகுவார்கள். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த
கருத்துவேறுபாடுகள் தீரும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் வெகு சீக்கிரம்
குணமடைவார்கள். தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணம்
கொண்டும் புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ, மேற்கொண்டு
அதிகமான முதலீடு செய்யவோ வேண்டாம். திரவப்பொருட்கள், வெள்ளைநிறம்
சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு
நல்ல பலன்கள் உண்டு.
அவிட்டம்
இந்தமாதம் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். ஞானிகள் தரிசனம்
கிடைக்கும். உங்களின் விடாமுயற்சி மற்றும் தைரியத்தால் அனைத்து பிரச்னைகளையும்
நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள். தொழில் அதிபர்களுக்கு
அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை
மேலும் பெருக்கித் தருவார்கள். ரியல் எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும்
புரமோட்டர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், செம்மண்
பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை
அடைவீர்கள்.
சதயம்
புதிய வாகனம் அமையும். மாதத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத்
தரும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று
நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும் வெளிநாட்டு
தொடர்பால் இந்த மாதம் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு
இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில்
மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில்
இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைக்கும்.
பூரட்டாதி
பூரட்டாதிக்கு அதிர்ஷ்டம் தரும் மாதம் இது. தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள்,
அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்ல
நேரம். எந்தக் காரியமும் உங்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும்.
வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். உங்களில்
சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். அதிகாரம் செய்யும் துறைகளில்
இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு. யூனிபாரம் அணிந்து வேலை செய்யும்
துறைகளில் இருப்போருக்கு கடும் வேலை நெருக்கடியிலும் சில நல்ல பலன்கள்
நடக்கும்.
உத்திராட்டாதி
இந்தமாதம் கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம்
சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான
நல்ல பலன்கள் நடக்கும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கும் மிகவும்
நல்ல பலன்கள் உண்டு. நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும் இதுவரை
உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப்
பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். சிலருக்கு வேலை மாற்றங்களும், பன்னாட்டு
கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். டிரெயினிங்கிற்காக வெளிநாடு
போவீர்கள்.
ரேவதி
இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். குலதெய்வக் கோவிலுக்கு
குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். மாதம் முழுவதுமே நல்ல
பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று
இப்போது நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். முப்பது
வயதைக் கடந்தும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். பூப்புனித
நீராட்டு விழா, வளைகாப்பு போன்ற வைபவங்கள் இல்லத்தில் உண்டு. காவல்துறை,
வனத்துறையில் பணி புரிபவர்களுக்கு சம்பள உயர்வு இதரபடிகள் போன்றவை
எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
No comments :
Post a Comment