கேள்வி.
பதில்.
தற்போது மிதுனத்திற்கு அஷ்டமச்
சனி நடந்து கொண்டிருப்பதால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே மிதுன ராசிக்காரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தலைவர்கள் எவரும் வயதுக்கேற்ற வகையில் நன்றாக இல்லை என்பதை அடிக்கடி எழுதிவருகிறேன்.
வேத ஜோதிடத்தின் விதிகள் துல்லியமானவை. அவை என்றும் பொய்ப்பதில்லை. மகளது ஜாதகப்படி தந்தையைக் குறிக்கும் ஒன்பதாம் வீட்டில் பாபக்கிரகமான செவ்வாய் அமர்ந்து, அந்த வீட்டை சனியும் தனது பத்தாம்
பார்வையால் பார்த்ததால் ஒன்பதாம் பாவகம் வலுவிழந்தது. ராசிக்கு 9-ஆம் இடத்தையும் சனி பார்க்கிறார். கூடுதலாக பிதுர்காரகனாகிய சூரியன் திக்பலமாக இருந்தாலும், நீச்சம் அடைந்து, சுக்கிரனோடு இருந்தும் சுபத்துவம் அடையாமல் அதிக தூரம்
விலகி, நவாம்சத்தில் சனியோடு இணைந்து
பாபத்துவமாக இருக்கிறார்.
இந்த அமைப்பின்படி ஒன்பதாம் பாவகமும், ஒன்பதாம் பாவகாதிபதியும், சூரியனும் பாதிக்கப்பட்டிருப்பதால் பேச ஆரம்பிக்கும்
வயதிலிருந்தே உன் மகளுக்கு தந்தை இல்லை என்கின்ற அமைப்பு உண்டு.
அதேநேரத்தில் இந்த குழந்தை பிறந்ததால்தான் உன்னுடைய கணவர் இறந்தாரா என்று கேட்டால், கேள்வியே முட்டாள்தனமானது என்று
சொல்வேன்.
ஒருவரின் இறப்பு அவர் சம்பந்தப்பட்ட அனைத்து உறவுகளின் ஜாதகங்களிலும்
பதிவாகி இருக்கும் என்பதே உண்மை. உன்னுடைய ஜாதகத்தின்படியும்
உன் கணவரின் மரணம் நிகழ்ந்திருக்கும். சொல்லப்போனால் அந்த நாளில் தானே இறக்க வேண்டும்
என்பது உன் கணவரின் ஜாதகத்திலும் கண்டிப்பாக பதிவாகி இருக்கும்.
உன்னுடைய கணவனை நீ அந்த நாளில் இழக்க வேண்டும் என்பது முன்பே நிச்சயிக்கப்பட்ட விதி. ஆகவே குழந்தை பிறந்ததால்தான் தந்தை இறந்தார் என்று ஒன்றும் அறியாத இந்தப் பிஞ்சுவின் தலையில் பழியைச் சுமத்த வேண்டாம்.
மிதுன ராசிக்காரர்கள் இருக்கின்ற வீடுகளில் குடும்பத்
தலைவிகள் நிம்மதியாக இல்லை என்பது உண்மை. வரும் 2022 செப்டம்பர் மாதம் இந்த குழந்தைக்கு
அஷ்டமச்சனி முடிகின்ற வரையில் உன்னுடைய தூக்கமில்லாத நிலை நீடிக்கும். தந்தையின் இழப்பைத் தவிர்த்து உன் குழந்தைக்கு சனி, கேதுவுடன் இணைந்து சூட்சுமவலுப் பெற்று,
புதன், சுக்கிரன் ஆகியோர் நல்ல நிலையில் அமர்ந்துள்ள யோக ஜாதகம். 19 வயதிற்கு பிறகு ஆரம்பிக்க இருக்கும் குருதசை முதல் இந்தக் குழந்தை மிகவும் நன்றாக
இருக்கும்.
இந்த குழந்தையின் எதிர்காலத்தை பற்றி நீ நிச்சயமாக
கவலைப்படத் தேவையில்லை. எதிர்காலத்தில் கணிதம், கம்ப்யூட்டர் போன்ற புதனின் துறைகளில்
நன்கு படித்து, நல்ல வேலை அமைப்புகளில் அமர்ந்து, நல்ல வாழ்க்கையை கொண்டிருக்கக்கூடிய குழந்தைதான் இவள். குழந்தையின் மிதுனராசிக்கு அஷ்டமச்சனி
முடிந்ததற்கு பிறகு உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும். வாழ்த்துக்கள் அம்மா. நன்றாக இருப்பாய்.
மதிப்பிற்குறிய ஆதித்யா குருஜி ஐயா அவர்களுக்கு
ReplyDeleteஎனது தங்கைக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது, அருகில் ஜாதகம் பாரப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பதில் தருகிறார்கள். இரண்டு முறை திருமண வாய்ப்புகள் கூடிவந்து நின்று விட்டது. இதனால் பெரும் மன உலைச்சலில் பெற்றோர்கள் உள்ளார்கள், இந்நிலையில் சில திருமண பெண் புரோக்கர்கள் தள்ளிபோடாதீர்கள் 28 வயது ஆகிவிட்டது அதனால் வரும் வரன்களில் ஒன்றை தேர்வு செய்யுமாறு பெற்றோறை கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் பெற்றோரும் பயப்படுகிறார்கள், நாங்கள் வசதிவாய்ப்புகள் குறைவான குடும்பம் தான், என் தங்கைக்கு நல்ல வரன்கள் அவளுக்கு பிடித்த மாதிரி வருமா? எப்போது திருமணம் நடக்கும்?. நீங்கள் தரும் விளக்கம் எங்கள் குடும்பத்திற்க்கு மிகவும் ஆறுதலாகவும் நம்ப தகுந்ததாகவும் இருக்கும். என் தங்கை வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டுங்கள்.
தங்கையின் பெயர் தவமணி, பிறந்த தேதி 10.09.1995, பிறந்த நேரம் 5.56 PM.