ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு
இதுவரை ராசியில் இருந்து வந்த குரு தற்போது இரண்டாமிடத்திற்கு மாறுகிறார். இது
உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு என்பதால் இந்தக் குருப் பெயர்ச்சி
காலத்தில் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.
தனுசுக்கு எழுத வேண்டியதை எல்லாம் ஏற்கனவே எழுதி விட்டேன். முழுக்க உங்களுக்கு விடிந்து விட்டது. உங்களின் வேதனை அனைத்தும் விலகும் பெயர்ச்சி இது. இம்முறை உங்கள் ராசிநாதன் குரு நீச்ச நிலையை அடைந்தாலும் ஏற்கனவே அங்கே ஆட்சி நிலை பெற்றுள்ள சனியுடன் இணைந்து நீச்ச பங்கம் அடைவதால் மிக நல்ல பலன்களைத் தருவார்.
எந்த ஒரு
விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக்குறைவு, கடன்தொல்லை
மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற
அனைத்தும் தீர்ந்து தனுசு ராசிக்கு மிகவும் மேன்மையான ஒரு காலம் ஆரம்பிக்கிறது.
உடலிலும்
மனதிலும் புதுத்தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள்.
நினைத்தவை நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற
முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். இதுவரை நடக்காமல் இருந்த விஷயங்கள் நடந்து மகிழ்ச்சியையும், வருமானத்தையும்
தரும். சிந்தனை,
செயல்திறன்
கூடும்,
முகத்தில்
பொலிவு வரும்.
இதுவரை இல்லாத
தன்னம்பிக்கை தேடி வந்து மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.
கௌரவம்,
அந்தஸ்து
கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து
குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.
தொழில்
சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் உங்களுக்கு
நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் முன்னேற்றமாக இருக்கும். சென்ற
காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும்
விரக்தியும் இனிமேல் இருக்காது.
இந்த
குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும்
மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது
துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப்பட்டுக்
கொண்டிருந்தவர்களுக்கு பணப் பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
இரண்டாமிடத்திற்கு
வரும் குருவால் தனம் வந்து சேரும் என்பதால் பண வரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள்
மாறி தொழில்,
வேலை, வியாபாரம் போன்ற
ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். கொடுத்த வாக்கை
காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி
அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.
வருடக்
கிரகங்களான ராகுவும், குருவும் தற்போது சாதகமான நிலையில் இருப்பதால் தனுசுவினர்
எதிலும் தயக்கத்தினை விட்டொழித்து ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி
நிச்சயம்.
தனுசுவினர் நியாயவான்கள்
என்பதாலும்,
எந்த
வேலைகளையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக் கூடியவர்கள் என்பதாலும், எதையும்
சட்டென கிரகித்துக் கொள்வீர்கள் என்பதாலும், இந்த கிரக மாற்றத்தை நல்ல முறையில்
உபயோகப்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள். பிறந்த ஜாதகத்தில் யோகமான தசா
புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு
இப்போது இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும்.
வீட்டில்
மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு
திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம்
கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை இப்போது
நீங்கும். புத்திர பாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குருபலம்
வருவதால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
நல்ல வேலை
கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல
சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொது
வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை
போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த
காலமாகும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து
கதவைத் தட்டும்.
பொருத்தமில்லாத
வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த
மாதிரியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். தொழில்
ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில்
முன்னேற்றமாக நடக்கும்.
அரசு, தனியார்துறை
ஊழியர்களுக்கு ‘இதர
வருமானங்கள்’
சொல்லிக்
கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப் பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு
போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப்
பெறுவீர்கள்.
கூட்டுத்
தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான
நிலைமையும் மாறும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.
தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி
சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில்
ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.
சுயதொழில், வியாபாரம்
போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக
நடக்கும். குருவின் சிறப்புப் பார்வை உங்களின் ஜீவன ஸ்தானத்தில் விழுவதால் குரு பார்க்க கோடி நன்மை எனும் பழமொழிப்படி நல்லலாபமும் வருமானமும் கண்டிப்பாக கிடைக்கும்.
சுயதொழில்
செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான
காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள்
ஆரம்பிக்கவோ,
இருக்கும்
தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும்
உதறித் தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.
தொழிலில்
சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அது முன்னேற்றப் பாதையில் செல்வதைக்
காண்பீர்கள். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும்
பெருக்கித் தருவார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு
இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.
விவசாயிகளுக்கு
இந்த குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல்
சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுப
நிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு
மேன்மை உண்டு.
தொழிலதிபர்களுக்கு
இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்
தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க
முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும்.
இரண்டாமிடத்தில்
குரு இருக்கப் போவதால் பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும்.
பெண்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு
பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப்
படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
பெண்கள்
நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இந்தக் குருப்பெயர்ச்சியில் நிறைவேறும்.
அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். பட்டுச்சேலை முதல் பாதக்கொலுசு வரை
வாங்குவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும்
அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.
வீட்டிற்கு
தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில்
உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும்.
இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சகோதரர்கள் உதவுவார்கள்.
குழந்தைகளின்
எதிர்காலத்திற்கான திட்டங்களை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு
இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம்
வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது
மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.
மத்திய மாநில
நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும்
ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள்
கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.
தனுசு ராசிக்கு
அற்புதமான காலகட்டம் இது. நீங்கள் நினைப்பது நிறைவேறும். தொட்டது துலங்கும்.
இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் எதிர்காலத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக
அமையும். பரம்பொருளின் அருளினால் இதைப் பயன்படுத்தி வாழ்க்கையை வளமாக்கிக்
கொள்வீர்கள் என்பது உறுதி.
பரிகாரங்கள்:
குரு தரும் நன்மைகளை
முழுமையாகப் பெற புகழ்பெற்ற திருத்தலமான ஆலங்குடி சென்று சிறப்பு ஆராதனைகளை
செய்யுங்கள். ஒரு வியாழக்கிழமை பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் குரு
ஹோரையில் ஒரு யானைக்கு அதற்கு விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் கேட்டு தெரிந்து
கொண்டு உணவிடுவது மிகுந்த நன்மை தரும்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment