சிம்மம்:
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய
எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
சிம்மத்திற்கு
அனைத்து விஷயங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய வருடமாக இந்த வருடம் அமையும்.
வருட ஆரம்பத்தில்
ராகு பதினோன்றாமிடத்தில் இருப்பது
உங்களுக்கு மிகுந்த லாபங்களைத் தருகின்ற ஒரு அமைப்பாகும். அதேபோல உங்களின்
யோகாதிபதியான குரு ஐந்தாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பது அதைவிட நல்ல
பலன்களை சிம்மத்திற்குத் தரும். எனவே பிறக்க இருக்கும் சார்வரி தமிழ்ப் புதுவருடம்
உங்களுக்கு நன்மைகளை மட்டுமே தரும்.
முக்கிய ஒரு கோட்சார
கிரக நல்ல நிலையாக பாபக்கிரகங்க;ளான சனி, ராகு, கேது நன்மைகளைத்
தரும் இடமாக 3, 6, 11-ம் இடங்கள் நம்முடைய
கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இம்முறை ராகு உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் இருக்க சனியும் ஆறில் இருப்பதால் சிம்மத்திற்கு சிறப்பான வருடமாக இது
இருக்கும்.
இந்த அமைப்பின்
மூலம் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பில் செட்டில் ஆகாத
சிம்ம ராசிக்காரர்கள் மேம்பட்ட
வருமானங்களைத் தரக்கூடிய வகையில் நிரந்தர அமைப்புகளை பெறுவீர்கள். மாதம் பிறந்தால்
நிரந்தரம் வருமானம் உண்டு. அதேபோல ராகுவின் சிறப்புக்களான வெளிமாநிலம், வெளிநாடு, இயங்கிக் கொண்டே
இருக்கும் பொருட்கள், அந்நியமொழி, இன, மதம் போன்ற
விஷயங்களில் உங்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும்.
இதுவரை கை கொடுக்காத
சொந்தத் தொழிலும், வியாபாரமும் இனிமேல்
லாபகரமாக நடக்கத் துவங்கும். வேலை இடங்களில் இதுவரை இருந்து வந்த சிக்கல்களும், எதிர்ப்புகளும் புத்தாண்டு முதல் விலக துவங்கும்.
தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும்
திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும்
எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும்.
பொதுவாக சிம்ம
ராசிக்காரர்கள் நல்லவர்களாக, மற்றவர்கள்
பொறாமைப்படும் அளவிற்கு நல்ல உழைப்பாளர்களாக இருப்பீர்கள். சுயநலம் என்பதே
உங்களிடம் இருக்காது. வீட்டை விட ஊருக்கு பாடுபடுவீர்கள். பள்ளிப்படிப்பை விட
அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை ஏமாற்ற
முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு.
சிம்மத்தினருக்கு
இந்த வருடம் நல்ல மாற்றங்களும், அந்த மாறுதல்களை
சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் அமைப்பும் இருக்கும். இதுவரை
தடையாகி இருந்த பாக்கியங்கள் கிடைக்கும். வயதுக்கேற்ற வேலை, திருமணம், குழந்தைபாக்கியம்
போன்றவைகள் கிடைக்காமல் மனஅழுத்தத்தில் இருந்தவர்கள் அனைத்தும் கிடைத்து நிம்மதி
பெறுவீர்கள்.
முப்பது வயதுகளில்
இருக்கும் இளையபருவத்தினருக்கு அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள்
ஒளிந்திருக்கும் புத்திசாலித்தனமும் வேறுபட்ட திறமைகளும் வெளிப்பட்டு சிலர்
புகழடையும் வாய்ப்பும் இருக்கிறது. இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு
கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. இதுவரை
வசதிகுறைந்த வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் கூட இந்த வருடம் வசதியான வீட்டிற்கு
மாறுவீர்கள். சிலர் ஒத்திக்கு வீடு எடுப்பீர்கள்.
அரசு, தனியார்துறை பணியாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள்
கிடைக்கும், மாணவர்களுக்கு பள்ளி
கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக
எழுத முடியும்.
இதுவரை மனதில்
இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு
மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. எதை நினைத்து கலங்குகிறோம் என்று தெரியாமல்
இதுவரை இனம் புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் கூட இந்த வருடத்தில்
இருந்து புது உற்சாகம் அடைவீர்கள்.
வேறு இன மொழி
மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம்
நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். வெகு தூரத்தில்
பணியிடம் அமையும். பிரயாணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாக இருப்பீர்கள்.
வீட்டில்
மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமணம்
நடைபெறும். மகன், மகளுக்கு திருமணம்
கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது
நீங்கும். புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
வேலை தேடிக்
கொண்டிருந்த இளைஞர்களுக்கு இந்தவருடம் நல்லவேலை கிடைக்கும். பொருத்தமில்லாத
வேலையில் இஷ்டமில்லாமல் இருந்தவர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த
மாதிரியான வேலை கிடைக்கும். மத்திய மாநில நிர்வாகப்பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும்
ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள்
கிடைக்கும்.
சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த
மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு இந்த
புத்தாண்டு மிகுந்த நன்மையை அளிக்கும். வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும்.
தொழிலதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த
முட்டுக்கட்டைகள் விலகும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது
பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். சொத்துச்சேர்க்கை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் நகைகள்
வாங்குதல், சேமிப்புகளில்
முதலீடு செய்தல், குழந்தைகளின்
எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும்.
சிம்ம ராசிப்
பெண்கள் ஆளுமைத்திறன் மிக்கவர்களாக இருப்பீர்கள். ஆண்களைப் போல அனைத்து
வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். ஒரு நிமிடம் நீங்கள் விழிப்புடன்
இல்லாவிட்டால் குடும்பத்திலோ, அல்லது தொழில்
அமைப்புகளிலோ ஏமாற்றப்படுவீர்கள். சிலர் மறைமுகமாக கணவரின் தொழிலை
நிர்வகிப்பீர்கள்.
புதுவருடத்தில்
நற்பெயரும் கௌரவமும் பெண்களுக்குக் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்ப ஆண்களால்
ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற
நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும்
ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு
கிடைக்கும்.
வெளிநாடு
சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில்
படிக்கவோ, வேலை செய்யவோ
முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள்
இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள்
இருக்கும்
கணவன் மனைவி உறவு
நல்லபடியாக மாறும். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல
முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது.
எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.
குலதெய்வத்தின்
அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய
மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி
பெறும் பாக்கியம் கிடைக்கும்.
அப்பா வழி
சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில்
ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். ஆலய சீரமைப்பு பணிகளில் சிலர் புகழ்
பெறுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் தேடிவரும்.
அரசியல்வாதிகள் புகழ் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
விவசாயிகள் வியாபாரிகள் போன்றவர்களுக்கு வருமானம் உண்டு.
கடந்த இரண்டு
வருடங்களாக ஐந்தாமிடத்தில் இருந்த சனியால் பிள்ளைகள் விஷயத்தில் தொல்லைகளையும், மன அழுத்தங்களையும், துயரங்களையும் அடைந்தவர்களுக்கு விடிவுகாலம் ஏற்பட்டு இனிமேல் பிள்ளைகள் மூலம்
நல்ல விஷயங்கள் இருக்கும்.
பிள்ளைகள் பற்றிய
கவலைகள் தீரும். மகனுக்கு இதுவரை நல்ல வேலை கிடைக்கவில்லையே, வயது ஏறிக்கொண்டே போகிறது மகளுக்கு இன்னும்
திருமணம் ஆகவில்லையே என்று நித்தம் நித்தம் கவலைப்பட்டு தூக்கம் இல்லாமல்
இருக்கும் சிம்ம ராசிக்காரர்களின் மனக்குறை தீரும். மகன், மகள் போன்றவர்களின் வேலை, திருமணம் தற்போது தடைகள் இல்லாமல் நடைபெறுவதை
பார்க்க முடியும்.
ஏற்கனவே நடந்த
திருமணத்தின் மூலம் சிக்கல்களை சந்தித்து நீதிமன்ற வழக்கு போலீஸ் என்று அல்லாடிக்
கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து வழக்கு ஒரு முடிவுக்கு வரும்.
இந்தக் காலகட்டத்தில் இரண்டாவது திருமணமும்
அமைந்து அந்த வாழ்க்கை நல்லபடியாகவும்,
நீடித்தும் இருக்கும்.
பங்குச்சந்தை
யூகவணிகம் போட்டி பந்தயங்களில் லாபம் கிடைக்கும். இதுவரை இழுபறியில் இருந்து வந்த
பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள்
உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம்
கிடைக்கும்.
வயதான பெற்றோரைக்
கொண்டவர்கள் அவர்களுடைய உடல்நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ
சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும்.
பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம்
தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து
வைக்கப்படும்.
சிம்மத்திற்கு யோகம்
தரும் வருடம் இது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment