Saturday, July 27, 2019

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (29.07.19 முதல் 04.08.19 வரை)


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

இதுவரை உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமலும், காரியம் கைகூடாமலும், அதிர்ஷ்டம் ஒத்துழைக்காமலும் இருக்கின்ற மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் வாரம் இது. உங்களின் கடந்தகால தவறுகள் அனைத்தும் இப்போது திருத்தப்பட்டு வாழ்க்கை சீரமைக்கப்படும் என்பதால் இந்த வாரம்  மேஷராசிக்கு சாதகமற்ற பலன்கள் எதையும் சொல்வதற்கு இல்லை. உங்களில் கறுப்புநிறப் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் போன்றவர்களுக்கு மனது சந்தோஷப்படும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.


இதுவரை கிணற்றில் போட்ட கல்லாகவோ அல்லது உங்களுக்கு சாதகமில்லாமல் சென்று கொண்டிருந்த வழக்கு விவகாரங்கள் இந்த வாரம் முதல் தலைகீழாக மாறி இனிமேல் உங்கள் பக்கமாக தீர்ப்பு வரும். தொழில் அமைப்பில் முட்டுக் கட்டைகள் விலகும். வேலையில் நிம்மதி கிடைக்கும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை  அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள்.

ரிஷபம்:

எட்டில் சனி அமர்ந்து ராசிநாதன் சுக்கிரன் நீசனுடன் பகை வீட்டில் இணைந்து வலுவிழந்த வாரம் இது. ரிஷபத்திற்கு சாதகமற்ற பலன்கள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நினைத்தது நடக்காது. எதிலும் ஒரு தொய்வு இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்காத வாரம் இது. உங்கள் உழைப்பு மட்டுமே உங்களிடம் மீதம் இருக்கும். ஆனாலும் எதையும் உங்களால் சமாளிக்க முடியும். உங்களின் மன உறுதி நன்றாக இருக்கும். மலையே உடைந்து தலைமீது விழுந்தாலும் நிலைகுலைய மாட்டீர்கள். எல்லாம் கொஞ்சகாலம்தான். பொறுத்துக் கொள்ளுங்கள்.

சனியினால் தொழில், நண்பர்கள், குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படுவதால் சிலருக்கு தற்போது பண நெருக்கடிகள் அதிகமாகத்தான் இருக்கும். பணம் சம்பந்தமாக கொடுக்கும் வாக்கு பலிக்காது. குடும்பத்திலும் மற்றவர்களுடன் கருத்து  வேற்றுமை இருக்கும். தற்போது அஷ்டமச் சனியாக எட்டில் கேதுவுடன் இணைந்து அமர்ந்து உங்களுக்கு நன்மைகள் எதுவும் தர முடியாமல் இருக்கும் சனி வருகின்ற ஜனவரி மாதம் முதல் மாறி விடுவார் என்பதால் அடுத்த வருடம் முதல் குறைகள் எதுவும் உங்களுக்கு இல்லை.

மிதுனம்:

வாரத்தின் ஆரம்பநாளே யோகக் கிரகங்கள் வலுவான நிலையில் இருந்து ஆரம்பிப்பதால் இது மிதுனத்திற்கு யோக வாரம்தான். ராசிநாதன் புதன் லாப வீட்டில் குருவின் பார்வையில் இருப்பதால் அனைத்து பிரச்னைகளையும் ஜெயிப்பீர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த சில வாரங்களாக இருந்து வந்த பின்னடைவுகள் இப்போது நீங்கும். நல்லவைகள் மெதுவாகத்தான் நடக்கும் என்பதன்படி மாற்றம் நிதானமாகத்தான் இருக்கும். உங்களில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் சற்றுக் கூடுதலாகவே இருக்கும்.

இதுவரை செய்து முடிக்க முடியாத விஷயங்களை தற்போது எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். ராசியில் செவ்வாய், ராகு சேர்க்கையால் கடந்த சில வாரங்களாக மனதைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகள் இனி தீர ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் தலையை பிய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நிரந்தரமான ஒரு வருமானம் உருவாகி கடனை அடைப்பதற்கான வழிமுறைகள் உருவாகும். மனதைப் பாதித்துக் கொண்டிருந்த சங்கடமான பிரச்சினைகள் விலக ஆரம்பிக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும்.

கடகம்:

இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் அன்னிய மத, இன, மொழியை குறிக்கும் ராகு பகவானுடன் இணைவதால் உங்களில் சிலர் சம்பந்தம் இல்லாத ஒரு இடத்தில் இருந்து எதிர்பாராத அதிர்ஷ்ட நிகழ்வுகளையும், பண வரவுகளையும் சந்திக்கும் வாரமாக இருக்கும். குறிப்பாக இஸ்லாமிய நண்பர்கள் மூலமாக சிலர் நல்ல விஷயங்களை சந்திப்பீர்கள். நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்த ஒருவரை இந்த வாரம் பார்ப்பீர்கள். அவர் மூலம் நன்மைகளும் இருக்கும். சிலருக்கு உயரமான இடங்களுக்கு போகும் அமைப்பு உண்டாகும்.

மலையும், மலை சார்ந்த இடங்களில் சுரங்கம், கிரஷர், ஜல்லி, கிரானைட் போன்ற தொழில் வைத்திருப்பவர்களுக்கும், அங்கே வேலை செய்பவர்களுக்கும் இந்த வாரம் நன்மைகளைத் தரும். கடந்த சிலமாதங்களாக உங்களுக்கு இருந்து வந்த கலக்கமான விஷயங்கள் இனிமேல் இருக்காது. லாபங்கள், பணவரவுகள் உண்டு. வீடு வாகன விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். இதுவரை அடுத்தவரை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் பனிரெண்டாம் வீட்டில் நீச செவ்வாய், சுக்கிரன், புதனுடன் இணைந்திருப்பதால், இது வீண்செலவுகளும், விரையமும் உள்ள வாரமாக இருக்கும். முகம் தெரியாத ஒருவரால் தேவையற்ற விரயங்கள் வரும் என்பதால் புதிதாக அறிமுகமாகும் நட்புகளுடன் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஐந்தாமிடமான ஐந்தாமிடத்தில் சனி இருப்பதால் வீட்டிலும், வெளியிலும் கருத்து வேறுபாடுகள், வீண் வாக்குவாதங்கள் வரும். கவனமாக இருங்கள். கையில் இருக்கும் சேமிப்பு இந்த வாரம் கரையும்.

ராசிநாதன் சூரியன் குருவின் பார்வையில் அமர்ந்து பதினொன்றில் ராகு இருப்பதால் வேறு இன, மொழி, மதக்காரர்கள் நேசமாக இருப்பார்கள். அவர்களால் லாபம் இருக்கும். விரைய ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூடுவதால் எவரிடமும் பண விவகாரமாக பேசுவதற்கு முன்பு ஒரு கணம் நிதானிப்பது நல்லது. வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். நான்கில் குரு அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் எவ்வித சிக்கல்களும் வராமல் அனைத்தையும் ஜெயிப்பீர்கள். கலக்கங்கள் எதுவும் இன்றி நீங்கள் கலக்கும் வாரம்தான் இது.

கன்னி:

கன்னி ராசிக்கு சூரியன், புதன் பதினொன்றாமிடத்தில் இணைந்து வலுப்பெற்று தொழில் யோகத்தை தரக்கூடிய நிலையில் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. குறிப்பாக காய்கறி, பழம், ஜூஸ், விவசாயம், பால், வாட்டர்கேன் போன்ற தொழில்களைச் செய்யும் கன்னி ராசிக்காரர்களுக்கு இது சிறப்பான வாரமாக இருப்பது நிச்சயம். தொழில்முறையில் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் இனி விலக துவங்கும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு இப்போது ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.

சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. புனிதத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நல்ல வருமானங்களும், மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், திருமணம், குழந்தைபிறப்பு, வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். கடுமையான போராட்டம் நிறைந்த சம்பவங்களாலும், ஏமாற்றங்களினாலும் என்ன செய்வது என்று தெரியாமல் துவண்டு போய் இருப்பவர்களுக்கு தெம்பையும், புத்துணர்வையும் தரக்கூடிய நல்ல மாற்றங்கள் இப்போது நடக்கும்.

துலாம்:

பத்தாமிடத்தில் ராசிநாதன் சுக்கிரனும், சூரியனும், செவ்வாய், புதனும் இணைந்த நிலையில் ஆரம்பிக்கும் வாரம் இது.  துலாம் ராசிக்காரர்களின் உற்சாகமும், திறந்த மனதும், நேர்மையான போக்கும், எதையும் அலட்சியமாக சமாளிக்கும் உறுதியும் இந்த வாரம் வெளிப்படும். ராசிநாதன் நீசனுடன் உள்ளதால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பலதரப்பட்ட சிந்தனைகளுடன் இருப்பீர்கள். வாரத்தின் பிற்பகுதி நாட்களில் அனைத்து நன்மைகள் கிடைக்க பெறுவீர்கள். இளைஞர்களுக்கு தற்போது எதிர்கால மாற்றங்களுக்கான அமைப்புகள் நடந்து கொண்டிருக்கும்.

உங்களில் பலர் எதிர்கால வாழ்க்கை அமைப்பிற்கான நிகழ்வுகளை சந்திப்பீர்கள். 30 வயதிற்குபட்டவர்கள்  மனதில் நல்ல திட்டங்களை தீட்டி அதை செயல் படுத்துவீர்கள். மனைவிக்கோ குழந்தைக்கோ சொந்த வருமானத்தில் சேமிக்கப்பட்ட பணத்தில் இருந்து நகை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்ல தொகையோ கிடைக்கும். ரியல்எஸ்டேட், புரமோட்டர்கள், மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள்.

விருச்சிகம்:

வாரத்தின் ஆரம்பமே பாக்யாதிபதி சந்திரன் உச்சநிலையில் இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் வாரம் இது. ராசிநாதன் செவ்வாய் ஒன்பதில் நீச நிலையில் இருந்தாலும் உச்ச சந்திரனால் நீசபங்கம் பெற்று குருவின் பார்வையில் இருக்கிறார். உங்களின் வேலை தொழில் அமைப்புக்கள் சிறப்பாக நடைபெறும். கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், துறைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். எதிர்ப்புகளையும், வேதனைகளையும், வீண்பழிகளையும், வம்புச்சண்டைகளையும் சந்தித்து வந்தவர்கள் மாற்றங்களை உணர்வீர்கள்.

அலுவலகங்களில் இருந்த பின்னடைவுகள் ராசிநாதன் வலுவால் சமாளிக்கப்படும். வருமானக் குறைவில் இருப்பவர்களுக்கு அது நீங்கி இனிமேல் நல்ல பணவரவு வரும். நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் ஒருவரால் உதவிகள் இருக்கும். 30,2,3 ஆகிய நாட்களில் பணம் வரும். 29 -ம்தேதி காலை 6.55 மணி முதல் 31-ம்தேதி காலை 9.15 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்டதூர பிரயணங்களோ எந்த ஒரு புதியமுயற்சியோ இந்த நாட்களில் செய்வதை தள்ளி வைப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான பலனாக, இந்த வாரம் எந்த ஒரு காரியமும் நிதானமாகத்தான் நடக்கும் என்பதைச் சொல்லலாம். அதேநேரத்தில் வார பிற்பகுதியில் நல்லபலன்கள் நடக்கும். பணவரவிற்கு குறை இருக்காது. சமாளித்து விடுவீர்கள். ராசிநாதன் குரு பனிரெண்டாமிடத்தில் இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் எதிர்பாராத தடைகள் இருக்கும். பிறந்த இடத்திலிருந்து தூரத்தில் இருப்பவர்கள் நன்மைகளை அடையப் பெறுவீர்கள். வேலைக்காக வெளியிடம் சென்றவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.

ஜென்ம ராசியில் சனி இருப்பதால் எந்த ஒரு சூழ்நிலையிலும் எவரிடமும் கோபப்படாமல் இருக்க வேண்டியது அவசியம். யாராவது நிதானம் இழந்து பேசி விட்டால் இது தீவிரமான கருத்து வேறுபாடுடன் சண்டையாகி நிரந்தர பிரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதால் எங்கும் எதிலும் கவனம் அவசியம். 1,2,4 ஆகிய நாட்களில் பணம் வரும். 31-ம் தேதி காலை  9.15 மணி முதல் 2-ம் தேதி காலை 9.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகள் முதலீடுகளை இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

மகரம் 

விரைய ஸ்தானத்தில் ராசிநாதன் சனி, கேதுவுடன் இணைந்திருக்கும் நிலையில் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. அதேநேரத்தில் பதினொன்றில் குரு அமர்ந்து லாபம் வலுப்பெறுவதால் உங்களுடைய மனோபலமும், எதையும் நேர்முகத்துடன் சந்திக்கும் தைரியமும் இப்போது அதிகரிக்கும். இதுவரை சந்திக்கத் தயங்கிய பல விஷயங்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். பொதுவாக மகர  ராசிக்காரர்களின் பின்னடைவுகளை தீர்க்கும் வாரம் இது.

பிறந்த ஜாதக அமைப்பின்படி தற்போது சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்கள் எதற்கும் கலங்கத் தேவையில்லை. உங்களில் உத்திராடம்  நட்சத்திரக்காரர்களுக்கு ஆபரணச்சேர்க்கை இருக்கும். 1, 2, 3 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம் தேதி காலை 9.29 மணி முதல் -ம் தேதி காலை 9.28 மணி வரை  சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் முக்கியமான முடிவுகள் எதையும் மேற்கண்ட தினங்களில் எடுக்க வேண்டாம்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களின் மறுமலர்ச்சி செயல்கள் ஆரம்பிக்கும் வாரம் இது. குறிப்பாக சதயம் நட்சத்திரக்காரர்களின் தொல்லைகள், துன்பங்கள் நீங்கத் தொடங்கி விட்டன. இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும் வாரம் இது. நீங்களும் அதைக் கூடிய சீக்கிரம் உணருவீர்கள். பிறந்த ஜாதக தசா புக்தி அமைப்பினால் இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் கூட, இந்த வாரம் மனதைத் தளர விடாமல் அனைத்தையும் அணுகினால் பரம்பொருள் உங்களை கைவிட மாட்டார் என்பது உறுதி. கும்பத்திற்கு குறைகள் இல்லாத வாரம் இது.

எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை தரும் நிகழ்வுகள் இந்த வாரம் நடக்கும். முருகப் பெருமானின் மைந்தர்களாகிய உங்களுக்கு இனி கெடுபலன்கள் எதுவும் வராமல் நன்மைகள் மட்டுமே உண்டு. அனைத்து விஷயங்களிலும் நீங்கள் பொருளாதார மேன்மையுடன், நல்ல பணவரவு மற்றும் அந்தஸ்துடன் இருக்க வேண்டிய சூழல்கள் உருவாகி நல்ல எதிர்காலத்தை தரக்கூடிய அமைப்பிற்கு மாறுகின்ற வாரமாக இது இருக்கும். கோர்ட், கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி இருப்பவர்களுக்கு ஆறுதல் தரும் சம்பவங்கள் இந்த வாரம் உண்டு.

மீனம்:

மீன ராசியினருக்கு ஒரு குறிப்பிட்ட பலனாக வார ஆரம்பத்தில் இனம்புரியாத மனக்கலக்கங்களும் தவறாக ஏதாவது நடத்து விடுமோ என்கிற இனம் தெரியாத பயஉணர்வும் இருக்கும். குருபகவான் ராசியை பார்ப்பதால் எந்தவிதமான எதிர்மறை பலன்களும் நடைபெறாது. மீன ராசிக்காரர்கள் எதையும் யோசித்துச் செயல்படும் குணமுடையவர்கள் என்பதால் இப்போது இளைய பருவத்தினர் எதிர்காலம் பற்றிய மனக் குழப்பத்தில் இருப்பீர்கள். கோட்சார கிரகங்கள் நன்றாக இருப்பதால் இப்போது நன்மைதான்.

எதிலும் எதிர்மறையாக யோசிக்காமல் நல்லவிதமாக செயல்பட்டு உயர்வுகளை பெறுங்கள். இப்போதைய கிரக நிலையால் கூடுதலாக நன்மைகளை அனுபவிக்கும் ராசிகளுள் மீனமும் ஒன்று என்பதால் உங்களுக்கு  குறைகள் எதுவும் இல்லை. சமீபத்தில் தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் இனி முன்னேற்றமாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.


(29.07.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.



No comments :

Post a Comment