மேஷம்:
மேஷநாதன் செவ்வாய், பாபர்களான சனி, ராகு தொடர்பால் பாபத்துவம் பெறுவதாலும், ராசிக்கு சுபத்துவம் இல்லாததாலும் மேஷத்தினரின் செயல்கள் அனைத்திற்கும் இந்த வாரம் தடைகள் இருக்கும். உங்களில் சிலருக்கு எதிலும் ஒரு சந்தேகப் பார்வையும், யாரையுமே நம்ப முடியாத ஒரு மனசஞ்சலமும் இருக்கும். அதிகமாக நம்பிக்கை வைத்து நீங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு விஷயத்தில் தடைகள் வரும். குழந்தைகள் விஷயத்தில் செலவுகள் உண்டு. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு சுப நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் இருக்கும்.
வார ஆரம்பத்தில் சில தவறுகளை செய்தாலும் வாரத்தில் இறுதியில் அவற்றை சீர்படுத்திக் கொண்டு உங்கள் செயல் திறனை பிறருக்குக் காட்டுவீர்கள். உங்களில் சிலருக்கு வரும் ஜூலை முதல் கஷ்டங்கள் படிப்படியாக விலகத் தொடங்கும். இது வரை நல்ல வேலை கிடைக்காமல் இருந்தவருக்கு வேலை கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி, தீர்வுகள் தெரிய ஆரம்பிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக்குறைவு இருக்காது.
ரிஷபம்:
ராசிநாதன் சுக்கிரன் ராசியில் அமரும் நல்ல வாரம் இது. எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் அது உங்கள் அருகில் கூட நெருங்காது என்பதால் தயக்கங்களை உதறினால் சாதிப்பீர்கள். பங்குவர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் முதலீடு செய்ய வேண்டாம். முதலில் சிறிது வருமானம் வருவது போல தெரிந்தாலும் கடைசியில் உள்ளதும் போய் விடும். உடல் நலமில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.
சிலருக்கு அஷ்டமச் சனியின் பாதிப்புக்கள் இருக்கும் என்பதால் சனிக்கிழமை தோறும் ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுவது சிறந்த பரிகாரம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். தூர தேசங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் வெளிநாட்டுக் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். தேவைப்படும் பணம் எப்படியும் கடைசி நேரத்திலாவது கிடைத்து விடும். தெய்வ வழிபாடு செய்வீர்கள். மாணவர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், தொழில் புரிவோருக்கு கஷ்டங்கள் எதுவும் இல்லை.
மிதுனம்:
ராசிநாதன் புதன் இந்த வாரம் முதல் ராசியிலேயே இருக்கும் நிலை பெறுகிறார். இது மிதுனத்திற்கு யோகங்களைத் தரும் என்பது நிச்சயம். ஆனால் ராசியில் செவ்வாய், சனி, ராகு சம்பந்தப்படுவதால் உங்களிடம் எதிலும் ஒரு மனக்கலக்கம் இருக்கும். எதை நினைத்து கலங்குகிறோம் என்பதே தெரியாமல் தெளிவற்ற ஒரு நிலையில் இருப்பீர்கள். மனம் அமைதியற்று இருக்கும் வாரம் இது. பண விஷயத்தில் குறைகள் எதுவும் இருக்காது. அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.
வேலை இடங்களில் திறமையைக் காட்ட முடியும். நண்பர்களால் மதிக்கப் படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். மனைவி சொல்லைக் கேளுங்கள். வாழ்க்கை மேம்படும். அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள். அரசியல்வாதிகள், கலைத்துறையினர், வியாபாரிகள், விவசாயிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இந்த வாரம் லாபம் தரும். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும்.
கடகம்:
அதிர்ஷ்டம் கை கொடுக்கும் வாரம் இது. உழைப்பும், முயற்சியும் இப்போது நிறைவான வெற்றியைத் தரும் என்பதால் உழைப்பவர்களுக்கு இந்த வாரம் அபாரமான நன்மைகள் உண்டு. நீங்களும் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதை இந்த வாரம் நிரூபிப்பீர்கள். கடகநாதன் சந்திரனும், யோகாதிபதிகள் சூரியனும், குருவும் நல்லநிலையில் இருப்பதால் மனமகிழ்ச்சியும் நிறைவான பாக்கியங்களும் கிடைக்கும் வாரம் இது. குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டு. கடகத்திற்கு கெடுதல்கள் சொல்ல எதுவும் இல்லை.
சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க இப்போது ஆரம்பங்கள் இருக்கும். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். சொந்த வாழ்க்கையிலும் வேலை, தொழில் அமைப்புகளிலும் ஏமாற்றத்தை சந்தித்து கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் இருக்கும். தந்தைவழியில் எல்லாவகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்ம பலம் கூடும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும்.
சிம்மம்:
சூரியன் வலுவாக இருப்பதால் சிம்மத்திற்கு பொருளாதார மேன்மையும், வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளில் யோகமும் வரக் கூடிய வாரம் இது. உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். சகோதர உறவு நன்றாக இருக்கும். எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் லாபங்கள் குறைவாகத்தான் இருக்கும்.
உங்கள் எண்ணங்களிலும், செயல்களிலும் இதுவரை இருந்து வந்த தயக்கங்கள் நீங்கி புத்துணர்வும், சந்தோஷமும் உண்டாகும் வாரம் இது. சுக்கிரன் வலுப் பெறுவதால் செயல்திறன் உண்டாகப் பெறுவீர்கள். ராசிநாதன் சூரியன் நல்ல நிலையில் இருப்பதால் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். நான்கு பேர் இருக்கும் இடத்தில் உங்களின் பேச்சு கவனிக்கப்படும். தொழிலில் இனிமேல் முன்னேற்றம் படிப்படியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் நல்ல பேர் எடுப்பீர்கள்.தனஸ்தானம் வலுப் பெறுவதால் பணத்திற்கு பஞ்சம் இருக்காது.
கன்னி:
ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் ஆட்சி பெறும் யோக வாரம் இது. வேலை, தொழில் விஷயங்களில் சாதிப்பீர்கள். புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு. செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு நல்ல திருப்பங்கள் இருக்கும். கவலைகள் தீரும் வாரம் இது.
வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன. தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலைசெய்வோர் போன்ற துறையினருக்கு நல்ல பலன்கள் நடைபெறும். பணவரவு சரளமாக இருக்கும். என்ன பிரச்னைகள் இருந்தாலும் பணத்திற்கு தட்டுபாடு இருக்காது. எனவே எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும். உங்களின் திடமான மன ஆற்றலும்; தைரியமும் வெளிப்படும் வாரம் இது. மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
துலாம்:
ராசிநாதன் சுக்கிரன் எட்டாமிடத்தில் ஆட்சி பெறும் நிபந்தனைகளுக்குட்பட்ட நல்ல வாரம் இது. இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் இனி நன்மைகள் நடப்பதை உணருவீர்கள். ராசிநாதன் சுக்கிரன், பாக்கிய ஸ்தானாதிபதி புதன் இருவரும் ஆட்சியாக இருப்பது யோகங்களை அளிக்கும் அமைப்பு என்பதால் இது உபயோகமுள்ள வாரம்தான். துலாம் ராசி இளையபருவத்தினர் எதிலும் இருக்கும் தயக்கத்தினை விட்டு ஒழியுங்கள். சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள்.
தொழிலில், வேலையில் நல்ல அனுபவங்களும், வளர்ச்சியும் இருக்கும். பிறரால் பாராட்டப் படுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். சுற்றுலா சென்று வருவீர்கள். கிரகங்கள் வாரம் முழுவதும் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கின்றன. வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் வசூலாகும். கொள்முதல் நன்றாக இருக்கும். சுக்கிரபலம் சாதகமாக இருப்பதால் கலைஞர்களுக்கு பிரமாதமான வாரம் இது. பண வரவும் வாரம் முழுமையும் மேன்மையாக அமையும் என்பது உறுதி. ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு கொள்வீர்கள்.
விருச்சிகம்:
உங்களுடைய செயல்திறமை, விடாமுயற்சி, கடும் உழைப்பு போன்றவை உங்களை ஒரு போதும் தோல்வியடைய வைக்காது என்பதால் விருச்சிகத்தினர் கவலைப்படத் தேவையற்ற வாரம் இது. விருச்சிகத்தினர் தற்போது அனுபவித்து வரும் மனக் கஷ்டங்களையும், பணப்பிரச்சினைகளையும் தீர்க்கும் அமைப்புகள் ஆரம்பமாகி விட்டன. விருச்சிக ராசிக்கு இருக்கும் எல்லா பிரச்சனைகளும் இன்னும் சில வாரங்களுக்குள் நல்ல வகையில் தீர்வுக்கு வரும். எதையும் சமாளிக்கும் மனோதைரியத்தை இறைவன் உங்களுக்கு அளிப்பார் என்பது உறுதி.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பங்கள் உண்டு. வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு விசா போன்றவைகள் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு கை கொடுக்கும். 5,6,7 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி காலை 11.39 மணி முதல் 6-ம் தேதி மதியம் 2.50 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.
தனுசு:
ராசியில் சனி, கேது, ஏழாமிடத்தில் செவ்வாய், ராகு என தனுசு ராசி இளைஞர்களின் மனம் எதிலும் நிலைகொள்ளாமல் சரியான முடிவுகள் எடுக்கத் தடுமாறும் கிரக நிலைகள் இப்போது இருக்கின்றன. தனுசுக்கு சங்கடமான வாரம் இது. மனம் எதிலும் ஒரு முழுமூச்சுடன் ஈடுபடாது. முக்கிய முடிவுகள் எதுவும் இப்போது எடுக்க வேண்டாம். அதேநேரம் சிக்கல்கள் எதுவும் வராது. எதிலும் நேர்வழியில் செல்லுங்கள். குறுக்குவழி வேண்டாம். வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம்.
வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்கள் கிடைக்கும் வேலையில் சேருங்கள். கௌரவம் பார்க்காதீர்கள். வீடு, வெளியிடம், அலுவலகம் எங்கும் யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். கண்டிப்பாக குடிக்காதீர்கள். காதலிக்காதீர்கள். 6-ம்தேதி பகல் 2.50 மணி முதல் 8-ம்தேதி மாலை 5.21 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பதும், அறிமுகமில்லா ஆட்களிடம் தேவையின்றி விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதும் நல்லது.
மகரம்:
இந்த வாரம் மகர ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காத இடங்களில் இருந்து லாபங்களும், பொருள் வரவும் கிடைக்கும். கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் மகரத்தினர் எதிலும் துடிப்புடன் இறங்கி செயலை முடித்து காட்டுவீர்கள்.. உங்களுக்கு ஆகாத எதிரிகளை நீங்கள் சிரித்த முகத்தோடு உறவாடிக் கெடுக்கும் வாரம் இது. சுக்கிரன் ஐந்தில் ஆட்சி பெறுவதால் இளைய பருவத்தினர் காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். அதே காதல் இன்னும் இரண்டு வருடம் கழித்து மன அழுத்தத்தில் கொண்டு போய் விடும்.
வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். சிலருக்கு சிகப்பு நிறமுடைய பொருட்களால் நன்மைகளும் பணவரவும் இருக்கும். குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும். 8-ம்தேதி மாலை 5.21 மணி முதல் 10-ந்தேதி இரவு 8.00 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நடக்காது. இந்த தினங்களில் புதிய முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டாம்.
கும்பம்:
நான்கு, ஐந்துக்குடைய புதனும், சுக்கிரனும் ஆட்சி நிலையில் இருப்பதால் கும்ப ராசிக்கு கெடுபலன்கள் எதுவும் இல்லாத நல்ல வாரம் இது. உங்களை இதுவரை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களை ஆதரிப்பார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். வேலை செய்யுமிடங்களில் நல்ல பலன்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். கடந்த காலங்களில் நடந்த பிரச்னைகளில் இருந்து நீங்கள் மீண்டு வரும் வாரம் இது.
விவாகரத்து, செக் ரிட்டர்ன், வாடகை, சொத்துப் பிரச்னைகளால் கோர்ட்டுக்குச் சென்றவர்கள் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். தொழில் நஷ்டம், வேலையிழப்பு போன்றவைகளை சந்தித்தவர்கள் மாற்றங்கள் நடந்து ஏற்கனவே இருந்து வந்தவைகளை விட நல்ல வேலையை அடைவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். முதல் திருமணம் கசப்பாக அமைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்ல முறையில் அமைவதற்கான ஏற்பாடுகள் நடக்கும். கும்ப ராசிக்கு மேன்மைகளைத் தரும் வாரம் இது.
மீனம்:
மீனத்துக்கு வளர்பிறை காலம் இது. வார ஆரம்பத்திலேயே ஐந்துக்குடையவன் உச்சமாகி இருப்பதும், சூரியன் மூன்றில் அமைவதோடு, ராசிக்கு குரு பார்வை இருப்பதும் நன்மைகளை தரும் கிரக நிலைகள் என்பதால் மீனத்தில் பிறந்த அனைவருக்கும் இப்போது நல்லவைகள் மட்டுமே நடக்கும். இதுபோன்ற ஆசீர்வதிக்கப்பட்ட கோட்சார கிரகநிலை இருந்தும் ஒரு மீன ராசிக்காரர் கஷ்டப்படுகிறார் என்றால் பிறந்த ஜாதகப்படி அவருக்கு கடுமையான தசா, புக்திகள் நடந்து கொண்டிருக்கும்
வியாபாரிகளுக்கு தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம். சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வீர்கள். மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்பத்தில் சில கருத்து வேற்றுமைகளும் வீண் பிரச்னைகளும் வரும். யாராவது ஒருவர் கோபப்படாமல் பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு சிறிய விஷயம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். எந்தப் பிரச்னையும் மீனத்திற்கு வரப்போவது இல்லை.
(03.06.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
அரசியல் கணிப்பில் தங்கள் கூறிய பலன்கள் மாறாக நடந்ததற்கு தங்களுக்கு நடக்கும் 71/2 சனியே காரணம். அதோடு மிதுன லக்கினத்தில் ராகு செவ்வாய் கூட்டு. தனுசு ராசியில் கேது. இவ்வளவு கட்டுரை எழுதிய தாங்கள் இது போன்ற நேரத்தில் அடக்கி வாசித்து இருக்க வேண்டாமா. ஷெ ல்வி அவர்களுக்கு போட்டியாக அரசியல் மாற்றம் நிகழும் என்று கூறினீர்கள். அதோடு நீங்கள் சொன்ன எதுவுமே நடக்க வில்லை. பொன் ராதா கிருஷ்ணன், பன்னீர் செல்வம், மோடி,அன்புமணி எல்லாமே பொய்த்துவிட்டது. ரஜினியை பற்றி வேறு கிண்டலாக பேசி இருக்கிறீர்கள். அவர் சிம்ம லக்கினம். அம்சத்தில் புதன் உச்சம். புதன்தசை அவருக்கு நல்ல விதமாகவே இருக்கும்.
ReplyDeleteஅதோடு எடப்பாடி ஆட்சி நீடிக்கும் என்று வேறு கூறி வருகிறீர்கள். எந்த நேரத்திலும் கவிழும் அல்லது கவிழ்க்கப்படும் என்று ஊருக்கே தெரியும். புரட்டாசி வரை கடினம் என்று ஷெ ல்வி கூறி இருக்கிறார். நீங்கள் பட்டு கூட திருந்தவில்லை. ஆட்சி கவிழ்ந்து மீண்டும் தேர்தல் வந்து ஸ்டாலின் முதல்வர் அனால் என்ன சொல்லுவீர்கள். இரண்டு ஆண்டு கழித்து பதவி ஏற்று கொள்ளுங்கள் என்றா. தங்கள் சொன்னது ஒரு வேளை பலித்திருந்தால் 2000தில் இருந்து 3000 கட்டணம் உயர்த்தி இருப்பீர்கள் அல்லவா .
தங்களுக்கே ஏழரை சனி இவ்வளவு இடையூறை செய்யும் போது 2000 ருபாய் கொடுத்து உங்களிடம் அவனது கஷ்ட காலத்திற்கு காரணம் ஏழரை சனி, அஷ்டம சனி என்று கூற போகிறீர்கள். அதன் பாதிப்பை தடுக்க முடிய போவதில்லை. அப்படி இருக்க இந்த கட்டணம் நியாயம் அற்ற ஒன்று. எனக்கு தெரிந்து நோய் தீர்க்கும் மருத்துவர் கூட இத்தனை வசூலிப்பது இல்லை. ttv தினகரன், பொன்னார் , அன்புமணி, ஸ்டாலின், மற்றும் வி ஐ பி களுக்கு பார்த்து தாராளமாக வசூல் செய்யுங்கள். அனால் மாதம் 15000 வருமானதில் கஷ்டப்படுபவனிடம் அளவோடு கட்டணம் பெற்று கொள்ளுங்கள். 30 நிமிடத்திற்கு 2000 அதுவும் அந்த கஷ்டம் தீரும் என்று எந்த guarantee யம் இல்லாத போடு அது மிகையே. தங்களை நான் இலவசமாக பார்க்க சொல்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். உங்களையே அந்த ஏழரை சனியில் உங்களால் அவ தூரில் இருந்து காப்பாற்றி கொள்ள முடியா வில்லை. அப்படி இருக்க ஒரு நடுத்தர வர்க்கத்தில் உள்ளவனுக்கு அந்த கட்டணம் கூடுதல் சுமை. மாலை மலர், விணடிவி இலவசமாக பலன் சொல்வது ஆறுதல் ஆன ஒன்று. தொடரட்டும் தங்கள் தொண்டு .
maalai malar wintv will pay him money for his time.
ReplyDeleteComments semma
ReplyDeletethank you.
Deleteமோடி துலா லக்கினமாக இருக்க வாய்ப்பே இல்லை. அவரது குணாதிசயங்கள் பார்க்கும் போது விருச்சிக லக்கினமே பொருத்தமாக உள்ளது. கடின மனம் கொண்டவர். தான் நினைப்பதில் உறுதியாக நிற்பவர். ஒரு வேளை துலா லக்கினமாக இருந்தால் ராஜயோகாதிபதி சனி மற்றும் சுக்கிரன் 11இல் இணைந்து 2,3 மனைவி அமைந்திருப்பாள் . கன்னி ராசியிஇல் உள்ள கேது செவ்வாயை போல் பூரண யோகத்தை செய்து இருக்கிறார். அதோடு லக்கினாதிபதி செவ்வாய் எட்டாம் வீட்டை தன பார்வையில் வைத்துள்ளார். தற்போது கோச்சாரத்தில் விருச்சிக லக்கினத்தில் உள்ள குரு அவரை மீண்டும் அரியணை ஏற்றியது. மிதுன லக்கினத்தில் உள்ள ராகு மற்றும் செவ்வாய் தங்களை பல்பு வாங்க செய்து விட்டது.
ReplyDeleteதுலாம் லக்னமே சரி.ஐந்தில் குரு இருந்து காரகோ பாவ நாசா செயல்படுவதும்,குரு சுக்கிரன் ஒருவரையொருவர் பார்த்து கொள்வதும், இரண்டில் நீசனுடன் இணைந்த செவ்வாய் ஐந்தை பார்ப்பதும், இறுதியாக 11ல் இருக்கும் சனி, சுக்கிரனுக்கு அது பகை வீடு என்பதும் புத்திர மற்றும் தார தோஷ அமைப்பு.11ம் அதிபதி 12ல் மறைவதும்,பகை வீடுகளில் இருக்கும் லக்ன யோகர்களால் 2வது மணைவி போன்ற அமைப்பினை செய்ய இயலாது என்றே நினைக்கிறேன்.அடுத்து நடக்க இருக்கும் நீசனுடன் இணைந்த செவ்வாய் தசை 2,7க்குரிய மாரகாதிபதி தசையாகவும், செவ்வாயின் பாவத்துவ குணமான வன்முறை,போர் இவைகளை நோக்கியே நாட்டை வழி நடத்தும்.
Deleteநான் நிறைய விருச்சிக லக்கின ராசி காரர்களிடம் பழகி இருக்கிறன் . துலாம் லக்கின காரர்கள் மென்மையான மனம் படைத்தவர்கள். விருச்சிக ராசி லக்கினமாக இருப்பதால் தர்மம் கர்மாதிபதி தசை அவருக்கு நல்ல யோகத்தை தந்துள்ளது . 5இல் ராகு அவருக்கு வாரிசு இல்லாமல் செய்தது. அஷ்டமாதிபதி புக்தியில் goback modi என தமிழ் மக்களால் புறக்கணிக்க பட்டர் , demonetisation failure பெரும் சவாலாக இருந்தது. இருந்தும் அவர் வெற்றி பெற்றுள்ளது தசா நாதன் மற்றும் கோச்சார குரு லக்கின/ராசியில் அமர்ந்ததால் மட்டுமே. அபிநந்தன் ,பாகிஸ்தானின் எல்லைக்குள் சென்று இந்திய படை செய்த தாக்குதல் இதெல்லாம் அவருக்கு சாதகமாக அமைந்தது. குரு எந்த ராசி யை கடக்கிறாரோ அந்த ராசியில் பிறப்பு ஜாதகத்தில் உள்ள கிரஹத்தின் தசா நடக்குமானால் அது வலுவாக வேலை செய்யும். அது யோகமாக இருந்தாலும் சரி, தோஷமாக இருந்தாலும் சரி. பிறப்பு ஜாதகத்தில் விருச்சிக ராசியில் சந்திரன் செவ்வாய். கோச்சார குரு விருச்சிக ராசியில். அஷ்டமாதிபதியாக இருந்தாலும் சூரியன் கேதுவுடன் இருந்ததால் புதன் அவருக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் வெற்றியை முடிய வில்லை.
Delete
Deleteவிருச்சிக லக்னப்படி 11ம் அதிபதி 11லியே உச்சமாக இருக்க ஏன் இரண்டாம் மனைவி இல்லை.யோசியுங்கள்.துலாம் லக்னமே சரி.
11ம் அதிபதி புதன் கேது மற்றும் சூரியனுடன் சேர்ந்து தன் இருக்கிறார். சூரியன் கர்ம ஸ்தானாதிபதி. அதோடு ராகு வாலியை போல எதிரில் உள்ள கிரஹத்தினை வலு இழக்க செய்வர்.. குருஜியின் கட்டுரையை மீண்டும் மீண்டும் படிக்கவும். குரு,செவ்வாய்,சூரியன் சந்திரன் கேது கூட்டணி ஜாதகத்தில் வலுவாக இருக்கிறது. சுக்கிரன் ஏழாம் வீடு அதிபதி என்பதால் அவரது திருமணம் சொற்ப காலம் வாழ்ந்தாலும் அந்த பந்தம் ஏற்பட்டு உள்ளது. ராகு கேடுகளுடன் சேர்ந்த கிரஹத்தை உச்சம் என்று கணக்கில் எடுத்து கொள்ள கூடாது.
Deleteஅரச பதவி க்கு செவ்வாய் சந்திரன் லக்கினத்தில் இருப்பது சிறப்பு. அதோடு நீச்ச பங்கம் அடைந்துள்ளது . 3,6,10,11இல் உள்ள ராகு கேதுக்கள் நன்மை செய்வார்கள். கேதுவுக்கும் கன்னி,விருச்சிகம்,கும்பம் பிடித்த வீடு. சில நூல்கள் கேது விருச்சிக லக்கினத்திற்கு லக்கினாதிபதி போலவும், ராகு கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதி போலவும் செயல் படுவார்கள் என்று கூறி இருக்கிறது. நான்காம் வீடு அதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து குருவின் பார்வையில் இருப்பதால் இன்றும் தாயார் நல்ல படியாக உள்ளார்.5இல் ராகு, புத்திர ஸ்தானாதிபதி குருவை சுக்கிரன் மாற்று சனியின் பார்வை பெற்றதாலும். ஐந்தாம் வீட்டிற்கு நான்கில் குரு மறைந்ததாலும் அவருக்கு வாரிசு இல்லாமல் போனது. லக்கினம் ராசி இரண்டும் ஒன்றாக இருப்பதால் அரசாளும் யோகம். அதே சமயம் குடும்பம் வாரிசு அமையாமல் போனது அவயோகம்.
ராகுவுடன் மிக நெருக்கமாக இணையும் கிரகமே வலிமையிழக்கும்.ராகுவால் பார்க்கப்படும் கிரகம் வலிமையிழக்கும் என்பது எனக்கு தெரிந்து இதுவரை இல்லை.மேலும் உச்ச புதனுடன் இணைந்திருக்கும் சூரியன்,கேது மற்றும் புதனை பார்க்கும் ராகு ஆகியோர் புதனுக்கு நண்பர்களே.நட்பு கிரகங்களின் இணைவு மற்றும் பார்வையை பெற்ற கிரகம் வலிமையாகவே இருக்கும்.மேலும் இங்கு குருவின் வீட்டில் இருக்கும் சுபத்துவ ராகுவே புதனைப் பார்க்கிறார்.அடுத்து நடக்க இருக்கும் நீச சந்திரனுடன் இணைந்த செவ்வாய் தசை லக்னாபதியாக செயல்படாமல் உங்களுக்கு விடை தரும்.அதுவரை பொறுங்கள்.மேலும் தாயை குறிக்கும் 4ம் அதிபதி சனி துலாம் லக்னப்படி லக்னத்திற்கு 11ல் 4ற்கு 8ல் மறைந்தாலும் குரு பார்வையில் இருப்பதும்,தாய் காரகன் சந்திரன் நீச பங்க ராஜயோக அமைப்பில் இருப்பதும் தான் தாயின் மேன்மையான நிலைக்கு காரணம்.
ReplyDeleteமன்னிக்கவும். குருஜியின் கட்டுரையை மீண்டும் படியுங்கள். ராகுவிற்கு இங்கு பார்வை கிடையாது. ராகுவிற்கு நேர் எதிரில் எந்த கிரகம் இருந்தாலும் வலிமை இழக்கும். ராகு = வாலி. முற்றிலும் இழக்காது என்று வேண்டுமானால் வைத்து கொள்ளுங்கள். ராகு அஷ்டமாதிபதியின் பார்வையில் இருந்ததால் தான் வாரிசு இல்லாமல் போனது. ராகுவிற்கு 6 8 ஆம் வீட்டின் தொடர்பு இருப்பது நல்லதல்ல . விருச்சிக லக்கினத்திற்கு செவ்வாய் லக்கினாதிபதி மட்டும் அல்ல ஆறாம் வீடு அதிபதியும் ஆவர். ஆகையால் செவ்வாய் தசை இரு வீட்டு பலனையும் சேர்த்தே செய்யும். புதனின் ஆதிபத்திய காரகத்துவதை ராகு தனது தசா புக்தியில் யில் எடுத்து செய்யும். ராகு குருவின் வீட்டில் இருந்தாலும் ராகுவிற்கு ஆகாத சூரியனின் பார்வையிலும் உள்ளார் என்பதையும் பொருத்தி பார்க்க வேண்டும். சூரியன் கேது இருவரும் புதனுக்கு நண்பர் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.குருஜி அவர்கள் சூரியன் சந்திரன்,செவ்வாய்,குரு,கேது தான் கூட்டணி என்று கூறி இருக்கிறார். இதை அருள் கூட்டணி என்று கூறுவார்கள். சனி,சுக்கிரன்,புதன்,ராகு பொருள் கூட்டணி . துலா லக்கினமாக இருந்தால் மோடி மல்டி மில்லியனராக இருந்திருப்பார் . ஆகாத கிரஹங்கள் 3,11ம் வீட்டில் இருந்தால் மட்டுமே நன்மை. சனி சுக்கிரன் மோடியின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் குருவின் பார்வையில் இருப்பது சிறப்பு.
Deleteஜோதிடத்தில் there is no thumb rule . அதனால் இது போன்ற கருத்து பரிமாற்றங்கள் மிகவும் தேவையான ஒன்று. தங்கள் கருத்துகளுக்கு நன்றி.
அருள் கூட்டணியில் புதனுக்கு இடமில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் புதன் சூரியனோடு முதல் தர நட்பு கொள்வதால் தான் இவர்களின் இணைவு புத ஆதித்ய யோகம் என்று சிறப்பாக சொல்லப்படுகிறது.சனி, சுக்கிரன், ராகு,கேதுவுடன் புதன் இணைவது இரண்டாம் பட்சம், மூன்றாம் பட்சம் தான்.விருச்சிக லக்னப்படி செவ்வாய் லக்னத்தை தொடர்பு கொண்டு 6ம் வீட்டிற்கு 8ல் மறைந்தால் நீசனுடன் இணைந்த லக்னாதிபதியாகவே 90 சதவீதம் செயல்படுவார்.அதனால் கடன், நோய்,எதிரி அமைப்பு குறைவே.ஆனால் துலாம் லக்னப்படி 2,7க்குரியவராக செவ்வாய் செயல்படுவார்.சர லக்னமான துலாமிற்கு செவ்வாய் 2,7க்குரிய தனாதிபதி,களத்திர ஸ்தானாதிபதியாக மட்டுமின்றி மாரகாதிபதியாகவும் செயல்படுவார் என்பது தங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன். தங்கள் கருத்துகளுக்கும் நன்றி.
ReplyDeleteமேஷம் செவ்வாயின் மூல திரிகோண வீடு, ஆறாம் வீடு அதிபதி நோய் , எதிரி இதில் ஏதாவது ஒன்றை தன தசையில் தந்தே தீருவார். லக்கினத்தில் செவ்வாய் இருப்பதால் தான் மோடி சிறந்த administrator ஆக அறிய படுகிறார். செவ்வாயின் சர்வாதிகார தன்மையும் அவரிடம் உள்ளது. chowkidar காவலாளி என்று தன்னை மக்களிடம் சென்றடைய செய்தார்.. காவலாளி - செவ்வாயின் மற்றொறு குறியீடு. 9ம் வீடு அதிபதி லக்கினாதிபதியிடன் சேர்ந்து லக்கினத்தில் இருந்து நீச்ச பங்க ராஜா யோக அமைப்பில் தசை நடத்தியதால் இரண்டு முறை அவரால் பிரதமர் ஆகும் பாக்கியம் கிட்டியது. துலா லக்கினத்திற்கு சந்திரன் யோகம் செய்ய மாட்டார். அதனால் மோடி பிறந்தது விருச்சிக லக்கினத்தில் என்று உறுதிபட தெரிகிறது . நன்றி.
Deleteபலனை தப்பாக கணித்து விட்டு லக்கினத்தின் மேல் பழி போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
மோடி யின் ஜாதகத்தில் குருவும் புதனும் வக்கிரம் பெற்று உள்ளன.. உச்ச வக்கிரம் நீச்சத்துக்கு சமம். ஒரு வேளை துலா லக்கினமாக இருந்தால் சூரிய தசையில் அவரால் குஜராத் முதல்வராக மீண்டும் வெற்றி பெற்றிருக்க முடியாது. 2002இல் குஜராத் கலவரம் இன்றளவும் அவருக்கு ஒரு கரும் புள்ளியை தரும் சம்பவம். ஆடு நடந்தது அஷ்டமாதிபதி புதன் புக்தியில்.
ReplyDeleteமுந்தைய பதிவில் சனி சுக்கிரன் 11ம் வீடு என்று தவறுதலாக பதிவிட்டுவிட்டேன் . 10ம் வீடு என்று பதிவிடுகிறேன். நன்றி