உத்திராட்டாதி:
இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி நிம்மதி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். குடும்பம் ஒன்று சேரும்.
இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி நிம்மதி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். குடும்பம் ஒன்று சேரும்.
உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம்
தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே
ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். வேலையில்
இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலை
நிரந்தரமாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கும்
திறமைக்கும் ஏற்றபடி வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு
ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை,
பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய
முடியும்.
ஆடம்பரச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கிரெடிட்கார்டு
உபயோகப் படுத்துவதில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும். குறிப்பிட்ட சிலருக்கு
நீண்டகால வீட்டுக்கடன் அமைந்து கடனாளி ஆனாலும் நல்ல வீடு அமையும் யோகத்தையும்
குருபகவான் தருவார்.
thank u sir.
ReplyDeleteThank u ji.
ReplyDelete