அடுத்த மாதம் நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சி முதல் மகர ராசிக்கு மிகவும் நல்ல பலன்கள் ஏற்படும் என்பதால் அதற்கு முன்னேற்பாடான அடிப்படை ஆரம்ப விஷயங்கள்
இப்போது நடக்கும். கடந்த ஒரு வருட காலமாக அஷ்டமக்குருவின் ஆதிக்கத்தினால் உங்களுக்கு தொழில், குடும்பம் போன்றவைகளில் இருந்து வந்த சங்கடங்களும் சாதகமற்ற
விஷயங்களும் இந்த மாதம் முதல் விலகும் என்பதால் இனிமேல் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் செயலாற்றுவீர்கள். மகரராசிக்காரர்கள் இனிமேல் மனதளவிலும்
உடல்நிலையிலும் பத்துவயது குறைந்து புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம்.
இதுவரை வேலை, வியாபாரம், தொழில் விஷயங்களில் இருந்து வந்த இடைஞ்சல்கள் நீங்கும். வேலை கிடைக்காதவருக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் மீண்டும் சூடு
பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆகஸ்டு மாதம் முதல் கிரகங்கள் நல்ல பலன்களை உங்களுக்கு
தரும் என்பதல் நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். கோர்ட், கேஸ், போலீஸ்
விவகாரங்கள் பாதகம் தராது. தொழிலாளர்களுக்கு பணிச்சுமை குறையும்.
தொழில் அதிபர்களுக்கு சிக்கல்கள் தீரும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் சற்று கசப்புகள் இருக்கும். பொறுத்துப் போவது நல்லது. அனைத்து விஷயங்களிலும் சிறிது தடைகள்
இருப்பதாகத் தோன்றினாலும் கடைசியில் உங்களுக்கு சாதகமாக வெற்றியாகவே முடியும். வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் உண்டு. நிலுவையில் இருந்த பதவி
உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
2,3,7,8,9,12,13,22,27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம்தேதி மாலை 5 மணி முதல் 10-ம்தேதி அதிகாலை 3 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களை
தள்ளி வைப்பது நல்லது. புதிய முயற்சிகளும், ஆரம்பங்களும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.
No comments :
Post a Comment