மாத ஆரம்பத்தில் இரண்டு வாரங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதாலும் ராசிக்கு குருபார்வை இருப்பதாலும் இந்தமாதம் மேஷராசிக்கு சந்தோஷங்களைத் தரும் மாதமாக
இருக்கும். குறிப்பாக அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் நன்மைகள் எதுவும் நடைபெறாமல் வாழ்க்கையில் இதுவரை செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு ஆறுதல் தரும் மாதமாகவும்
இருக்கும்.
மேஷத்தினருக்கு இப்போது மாற்றங்கள் நடைபெறும் காலம். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் மாற்றங்களைச் சந்திப்பீர்கள். சாப்ட்வேர், கணக்கு,
ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாத நிலைமை இருக்கும். அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
அனாவசியமாக எவரையும்
பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம். எந்த ஒரு விஷயமும் நீண்டமுயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும்
விடாமுயற்சியும் இப்போது தேவைப்படும். அனைத்து விஷயங்களிலும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது.
தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின் கட்டுக்குள்
இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள்
இருக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும்
உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.
1,3,7,8,10,11,17,18,20,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம்தேதி அதிகாலை 3 மணி முதல் 17-ம்தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர
பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்று இரண்டாக யோசிப்பது நல்லது.
No comments :
Post a Comment