ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
உங்களுடைய ராசி என்ன? என்று கேட்டால் ‘பளிச்’ சென்று பதில் சொல்லும்
ஒருவரிடம் அவரது லக்னம் என்ன? என்று கேளுங்கள். சற்றுத்
திணறுவார்.
ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களே லக்னத்தின் முக்கியத்துவத்தை சரியாக உணருவதில்லை.
ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பதுதான் உயிர் போன்றது. ராசி வெறும் உடல் மட்டும்தான். லக்னம் மட்டுமே ஒருவருடைய ஆளுமைத் திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவருடைய முழு வாழ்க்கையிலும் அவருக்கு நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு ஆதாரத் தூண் போன்றது. ராசி என்பது லக்னத்திற்கு துணை செய்யும் ஒரு அமைப்புத்தான்.
இத்தனை சிறப்பு மிக்க லக்னத்தை ஒருவர் நினைவில் கொள்ளாமல் ராசியைத்தானே தெரிந்து வைத்திருக்கிறோம்? பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி போன்ற பிற ஊடகங்களும் ராசிபலன்தானே வெளியிடுகின்றன? லக்ன பலன் வெளியிடுவதில்லையே அது ஏன்? லக்னம், ராசி இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்தான் என்ன?
நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி அளவு கொண்ட வான்வெளியை பனிரெண்டு சமபங்குள்ள தலா 30 டிகிரி அளவுள்ள பகுதிகளாகப் பிரித்த நமது ஞானிகள் அவற்றிற்கு மேஷம், ரிஷபம், மிதுனம் என பனிரெண்டு பெயர்களையும் சூட்டினார்கள். இவை பொதுவான ராசி வீடுகள்.
நீங்கள் பிறக்கும் நேரத்தில் பூமியின் கிழக்கு வானில் இவற்றில் எந்த ராசி உதயமாகிறதோ, அதாவது பூமியின் சுழற்சிப் பாதையின்படி எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ அந்த ராசி வீடே ஒரு மனிதனின் லக்னம் எனப்படுகிறது.
பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றிக் கொள்வதால் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருப்பவருக்கு தோராயமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு ராசியும் மாறுவது போன்ற தோற்றம் இருக்கும். எனவே பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை லக்னம் மாறிக் கொண்டே வரும். அதாவது ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் அடுத்தடுத்த லக்னங்களில் மனிதர்கள் பிறப்பார்கள்.
உதாரணமாக சென்னையில் ஒரு குறிப்பிட்ட இரண்டுமணி நேரத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் ஒரே லக்னம் ஒரே ராசியில்தான் பிறக்கும். எடுத்துக்காட்டாக மிதுன லக்னம், தனுசு ராசி என்றால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் கடக லக்னம், தனுசு ராசி என்றும் பின்னர் சிம்ம லக்னம், தனுசு ராசி என்றும் பிறக்கும்.
ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்கு பின்னால் இந்த பனிரெண்டு ராசிகளில் எந்த ராசி இருக்கிறதோ அதுவே அந்த ஜாதகரின் ராசி எனப்படுகிறது. லக்னத்தின் அளவு தோராயமாக இரண்டுமணி நேரம் என்பதைப் போல ராசியின் அளவு சுமாராக இரண்டேகால் நாள் இருக்கும். ஒரு ராசியில் இரண்டேகால் நட்சத்திரங்கள் அடங்கியுள்ளபடியால், சந்திரன் தோராயமாக ஒருநாள் முழுவதும் ஒரே நட்சத்திரத்திலும், இரண்டு நாட்கள் ஒரே ராசியிலும் இருப்பார்.
பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் வரும் பொதுவான ராசிபலன் என்பது உங்களின் தோராயமான பொதுப்பலன்தான். அவை துல்லியமானவை அல்ல. இந்த ராசிபலன்கள் உலகில் உள்ள ஒட்டு மொத்தமான அனைவரையும் பனிரெண்டு பகுதிகளாகப் பிரித்து சொல்லப்படுபவைதான். இவை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பலிக்கும் என்பது நிச்சயம் அல்ல.
ஆனால் லக்னப்படி பலன்கள் என்பது அப்படியல்ல. அந்த பலன்கள் பிறந்த ஜாதகப்படி கிரகங்கள் அமைந்த விதத்தைத் கொண்டு ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனியாக சொல்லப்பட வேண்டும் என்பதால் ஒரு தேர்ந்த முழுமையான ஜோதிடரால் துல்லியமான பலன்களைச் சொல்ல முடியும்.
லக்னமும், ராசியும் இணைந்த தண்டவாளங்கள் போன்றவை. இரண்டையும் இணைத்துத்தான் பலன் சொல்ல முடியும். சொல்லவும் வேண்டும். அப்போதுதான் அது முறையான ஜோதிட பலன்களாக இருக்கும்.
லக்னப்படி ஒரு கிரகம் கெடுபலன் அளிப்பதாக இருந்தாலும், பிறந்த ராசிப்படி அக்கிரகம் யோகராக இருந்தால் முழுமையாக கெடுபலனைச் செய்யாது. லக்னப்படியும், ராசிப்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு நன்மைகளை அளிக்கும் தன்மை கொண்டதாக இருந்து அதன் தசை நடக்கும் போது அதன் தசை அதிர்ஷ்ட பலன்களை அளிக்கும்.
லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்க அந்த கிரகம் விதிக்கப்பட்டிருந்தால் அதன் தசையில் 60 சதவிகித நன்மைகள் நடக்கும். லக்னம், ராசி இரண்டின்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு தீமை செய்ய வேண்டிய அமைப்பு இருந்தால் நிச்சயம் அதன் தசையில் கெடுபலன்கள்தான் நடக்கும் என்று கண்களை மூடிக் கொண்டு சொல்லி விடலாம்.
சரி........
ராசிப்படி பலன்கள் சொல்லப்படும் வழக்கம் எப்படி வந்தது?
லக்னம் என்பது இரண்டுமணி நேரத்திற்கு ஒருமுறை மாறக்கூடியது, ராசி என்பது இரண்டு நாள் உடையது என்று சொன்னேன். நேரத்தை அளவிடும் துல்லியமான கருவிகள் கண்டுபிடிக்கப்படாத முன் காலத்தில், அரச குடும்பத்தினர், மந்திரிகள், தளபதிகள், பணக்காரர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே, குழந்தை பிறந்த துல்லியமாக நேரத்தைக் கணித்து லக்னப்படி பலன் பார்க்கப்பட்டது.
சமுதாயத்தின் மற்ற பிரிவினருக்கு ஒருநாள் முழுவதும் ஒரு நட்சத்திரமும், இரண்டு நாட்கள் வரை ஒருவரின் ராசியும் இருக்கும் காரணத்தால் ராசி அல்லது நட்சத்திரத்தை வைத்தே தோராயமான பலன்கள் சொல்லப்பட்டன. அதன்படியே தற்போது பொதுப்பலன்களாக ராசிபலன்கள் சொல்லப்படுகின்றன.
தற்போது கடிகாரங்கள் எல்லா இடங்களிலும் புழக்கத்திற்கு வந்து விட்டதாலும், மக்களிடமும் குழந்தை பிறக்கும் சரியான நேரம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதாலும் ஒருவரின் பிறந்த ஜாதகத்தை வைத்து தனியே லக்னப்படி பலன் அறிவதே சரியானதும், துல்லியமானதும் ஆகும்.
( சென்ற வார பால ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்
Nice article thanking you
ReplyDeleteDear Sriman (Mr.) Adhithya Guruji
ReplyDeleteVery Nice Article. We are expecting more article for each lagna.
one small question : 1 ) what is malai yogam & kalasharpa yogam.
Say for example malai yogam - Ascendant -Scorpio - 6th kethu, 7th guru, 8th moon (Bhavaga matram- if you consider "Tirukanidham"), 9th Saturn, 10th Sun and venus, 11th Mars with Mandhi and 12th Rahu. This is Malai Yogam
or
Kala Sarpha Yogam - why means kethu Starts with 6th place(Mesha) & 12th Rahu (Thula)
or Kala Sarpha Dosham.
Could you please reply sir. or more elaborate through article. Already I read yr Rahu Kethu (Saya Grahangal) article.
Please reply.
Thanks & Regards
Arul
மாலை யோகம் என்பது இராகு கேது தவிர்த்து ஏனைய ஏழு கிரகங்களும் வரிசையாக வீடுகளில் அமர்ந்திருப்பது. அவை தனித்தனியே 7 வீடுகளில் அமர்ந்திருக்கலாம். அல்லது அதிக கிரகங்களும் ஒரு வீட்டில் இருக்கலாம். ஆனால் அடுத்தடுத்து இருக்க வேண்டும். இந்த அமைப்பு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி போன்றவர்களுக்கு உண்டு. நான் கேள்விப்பட்டது இவை இலக்கினத்தை ஒட்டி (ஆனால் இலக்கினத்தை தவிர்த்து அமைய வேண்டும்) என்பதே. அதாவது, 11, 12, 2, 3 வீடுகளில் ஏழு கிரகங்களும் அமைந்தால் மாலை யோகம். இலக்கினத்தில் இருந்து 7ம் வீட்டிலிருந்து இந்த அமைப்பு இருப்பது மாலை அல்லது கிரகமாலிகா யோகத்தில் வருமா என்று எனக்கு நிச்சயமாக தெரியவில்லை.
Deleteஅருள்,
Deleteநீங்கள் கூறியிருக்கும் அமைப்பு இராகு கொடி பிடித்து செல்லும் கால சர்ப்ப தோஷ அமைப்பு. கேது கொடி பிடித்து செல்லும் அமைப்புக்கு விலோமா யோகம் என்ற பெயரும் உண்டு. அது அவ்வளவு நன்மை அளிக்கும் அமைப்பு அல்ல என்று படித்திருக்கிறேன். கடிகார சுற்று படி இராகு கொடி பிடித்து செல்லும் அமைப்பு 32 வயது வரை ஜாதகரை பல சோதனைகளுக்கு ஆளாக்கினாலும், வாழ்வின் பிற்பாதி சிறப்பாக அமைய வழி வகுக்கும் என்று படித்திருக்கிறேன்.
லக்னம் என்றால் என்ன என்று தெளிவாக விளக்கவும்
Deleteலக்னத்திற்கும் ராசிக்கும் உள்ள வித்தியாசம் தொடர்பு என்ன?
Good article
ReplyDeleteI had this question in my mind. This article clarified many of my doubts. Great work sir.
ReplyDeleteGood explanation Sir!!!
ReplyDeleteவணக்கம்!!
ReplyDeleteபெயர் : ஹரிஹரன். G
பிறந்த தேதி : 15th செப்டம்பர் 1990
பிறந்த நட்சத்திரம் : பூசம் , கடகம் ராசி
பிறந்த நேரம் : காலை in between 10.15am to 10:30 am at Aruppukkottai, TamilNadu-India.
பிறந்த இடம் : அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு
( My parents told that I was born between 10.15 to 10.30am on 15/09/1990)
கேட்கவிரும்பும் கேள்வி :
I am having doubt in my Lagna whether It is Thulam or Viruchagam ?? ( விருச்சிக லக்னம் ?? or துலாம் லக்னம் ?? )
நீங்கள் கேள்வி கேட்டு பல மாதங்கள் சென்று விட்ட படியால் நிச்சயம் இப்போது உங்களுக்கு விடை கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தும் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க முனைகிறேன். உங்கள் இலக்கினம் கன்னி என்று தெரிகிறது. நீங்கள் பிறந்த ஊரில் சூரியோதயத்தில் இருந்து 2 மணி நேரம் உங்கள் இலக்கினம், சூரியன் அமர்ந்த இடமான சிம்மம் (சூரியன் கிழக்கில் உதிப்பதால்). அடுத்த இரண்டு மணி நேரம், இலக்கினம் அடுத்த இராசியான கன்னிக்கு மாறும். அதன்படி நீங்கள் பிறந்த அன்று சூரியோதயம் அருப்புக்கோட்டையில் 6:35 ஆக இருந்திருக்கலாம். இது வாக்கிய அல்லது திருக்கணித பஞ்சாங்கப்படி மாறலாம். எப்படி இருந்தாலும் உங்களுக்கு விருச்சிக இலக்கினம் வர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
DeleteTHUAM LAKNAM DEGREE: 28:46:15 FOR 10 15 AM BUT AFTER 10 MINITES IT GOES VIRUCHGAM..U ARE BORN IN BORDER...U MUST KNOW THE CORRECT TIME WITH THE HELP OF ONE BEST ASTROLOGER LIKE GURUJI..ALLTHE BEST
Deleteசார் எனது பெயர் பார்த்திபன்
ReplyDeleteபிறந்த தேதி 03/10/1973
பிறந்த நேரம் 04-50 am
பிறந்த இடம் சேலம்
நான் அதிர்ஷ்டம் யோகம் உடையவனா
illai
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIm anish from nagercoil,
ReplyDeleteMy dob 28 /3/1991. 4 20 pm
Simma raasi simma lagnam.
I have finished mba. But i didnt get job. Still i m searching.. and also i like go gulf. Most of my frnds and relatives working in gulf. But past 2 years they have tell. We dont get any job for u.. whats the pbm going on my life.. i m fully confused..
குருஜி அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteஎனது பெயர் ப.செந்தில் முருகன் , எனது ஊர் விருதுநகர் நான் பிறந்த தேதி 13.04.1990 வெள்ளிக்கிழமை .
நான் பட்டபடிப்பு முடித்துள்ளேன் இன்னும் எனக்கு ஒரு சரியான வேலை அமையவில்லை.அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா..?
தங்களின் மேலான பதிலுக்காக காத்திருக்கிறேன் .
நன்றி ..
லக்னம் காலியாக இருந்து, லக்னத்திற்கு இருபுறமும், தொடற்சியாக கோள்கள் இருந்தால், அது பந்தன யோகம் எனப்படும்.
ReplyDeleteஇது ஒரு அவயோகமாகும்.
ஜாதகரை செயல்படவிடாமல் தடுக்கும்.
பாதகம் செய்யும் தசா புக்தியில் சிறை வாசம் செய்யும் அமைப்பு கூட ஏற்படலாம்.
வணக்கம்!!
ReplyDeleteபெயர் :Kesavan.S
பிறந்த தேதி : 28th November 1988
பிறந்த நட்சத்திரம் : பூசம் , கடகம் ராசி
பிறந்த நேரம் :03.10pm to 3.15 pm.
பிறந்த இடம் : pattukottai,
Thanjavur (DT), தமிழ்நாடு
கேட்கவிரும்பும் கேள்வி :
I am having doubt in my Lagna whether It is Meenam Lagna or Mesam Lagna ??
லக்னம் மேஷம்
DeleteGuru ji Namaskkaram, Lagnamum rasiyoum ondraga amaivathu sirappu eanru sollugirargal athu unmaya? Naan Thula Rasi Thula Lagnam ithu migavum sirappu eanru sollugirargal ithu Unmaya? Please explain sir.
ReplyDeleteName: Durairaj
ReplyDeleteBirth time: 19 March 1986, time 3:00PM
Rasi: Mithunam
Natchathiram: Thiruvathirai
Lagnam: Kadagam
Question:
In my birth chart, the lagnathipathy is in 12th house.
Right now Sani maga thasa and kedu puthi is going on for me.
Do I need to consider only my rasi while checking the thasa puthi palangal or should follow with lagna palangal?
Please advise
Good evening Guruji,
ReplyDeleteI have few questions on Astrology.
Please clarify.
1. For women, do you use the same birth chart(at the time of her birth) to predict her life at any point of time?
2. Why astrologers say that the mom's birthchart won't be valid after she gets a baby?(most of the women go for work now).
3. when the lagnathipathi is in 12th house from the lagna, do we need to predict one's life only based on Rasi?
Here is my birth details:
Please let me know whether the langathipathi has any effects in my life.
Name: Durairaj
DOB: 19 March 1986
Time: 3:00PM
Place: Udumalaipetai, Tiruppur Dt, Tamil Nadu
Regards,
Durairaj