ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜிகைப்பேசி : 8681 99 8888
மேஷம்:
வாரம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் உச்ச நிலையில் சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாக இருப்பதும், கூடவே அதே பத்தாம் இடத்தில், யோகாதிபதியான சூரியன் இருப்பதும் மேஷத்திற்கு நல்ல அமைப்பு. பருத்தி புடவையாய் காய்த்தது போல, ராசியிலும் குரு இருந்து ஒன்பதாம் இடத்தைப் பார்க்கிறார். மேஷத்திற்கு இனி யோகம், யோகம், யோகம்தான். இளைஞர்களில் சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். சுக்கிரன், செவ்வாய் இணைவதால், காதல் வரும் நேரம் இது. இளைய பருவத்தினர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்த வேலை தொழில் அமைப்புகள் கூடி வரும்.
தொழில் விஷயங்களில் எந்தவித சிக்கல்களும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. உங்களின் வேலையும் சுமுகமாகவே நடைபெறும். வேலை மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைய பருவத்தினருக்கு மாற்றங்கள் உண்டு. அரசு ஊழியர்கள் அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு நேர்மையற்ற விஷயங்களை செய்யாதீர்கள். கணவன்-மனைவி உறவில் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இது நல்ல நேரம். மேலிடத்தின் பார்வையில் உங்களின் உழைப்பு தென்பட்டு பதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இது தடைகள் உள்ள வாரமாக இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் வாரம் முழுவதும் தனக்கு ஆகாத கிரகங்களான சூரியன், செவ்வாயுடன் இணைந்து எரிச்சல் நிலையில் இருந்தாலும் கூட, அவர் நட்பு வீட்டில் இருக்கிறார். கூடவே ஒன்பதாம் இடத்திலும் இருக்கிறார். உங்களில் வேலை,தொழிலில் நிம்மதியின்றி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு அமைதி கிடைக்கும் நேரம் இது. அடுத்தவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். கீழே வேலை பார்ப்பவரிடம் எந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அதனால் சிக்கல்களும் நம்பிக்கை துரோகங்களும் இருக்கும்.
இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வருகிறது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து நவம்பருக்கு மேல் திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள். எவரையும் நம்பி முதலீடு செய்வதோ, அடுத்தவரை நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ வேண்டாம். புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு கெடுபலன்கள் எதுவும் சொல்ல இயலாத வாரம் இது. ராசிநாதன் புதன் சுபத்துவ நிலையில் எட்டாம் இடத்தில் இருப்பது நல்ல அமைப்பு. சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், பங்குச்சந்தை சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேசன் துறைகளில் லாபம் வருவதும் இப்போது உண்டு. தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும். சிலருக்கு தடைகளுடன் கூடிய வெற்றி உண்டு.
யோகாதிபதி சுக்கிரன், எட்டில் மறைந்தாலும் மங்கள யோகத்துடன் வலுவாக இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி பெறும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். சிலருக்கு தாயார் வழியில் செலவுகளோ, விரயங்களோ இருக்கும். வீடு ரிப்பேர், வாகன பழுது போன்றவைகளை செய்ய வேண்டி இருக்கும். பணவரவு இருக்கும் என்றாலும் அதற்கு சரியாக வீண் செலவுகளும் இருக்கும் என்பதால் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யவும். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு இது நல்ல வாரம்தான்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சண்டை, சச்சரவுகளும் சோம்பலும் வரும் வாரம் இது. ராசிநாதன் இருளுக்கு அருகில் இருக்கிறார். உங்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதனைக் கை விடுவது நல்லது. முடியவில்லை என்றால் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். அஷ்டமச் சனி நடந்து கொண்டிருப்பதால், அதிலும் ஆயில்யம் இப்போது பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் பலவிதமான தொல்லைகள் சனியின் காரகத்துவமான மதுவின் மூலமாகவே வரும் என்பதால் மதுவை ஜெயிக்க முடிந்தால், மரணத்தையும் ஜெயிக்கலாம்.
இளைய பருவத்தினர் வேலையில் அக்கறையுடன் இருங்கள். பத்தில் இருக்கும் குரு உங்களை எங்கே கொண்டு போய் கவிழ்க்கலாம் என்று செயல்படுவார் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. சுக்கிரன் செவ்வாயுடன் ஏழில் இருப்பதால் பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். சகோதரிகள் திட்டுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இருக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இன்னும் நான்கு வாரங்களுக்கு ஒருவிதமான முடக்க நிலையை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும்.
சிம்மம்:
பூரம் நட்சத்திரத்தினரின் நல்ல வாரம் இது. தடைகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நிலுவையில் இருக்கும் விஷயங்கள் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமாக அனைத்தும் நடக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நல்லவை நடக்கும். காவல்துறை, கோர்ட் போன்றவற்றில் வழக்கு இருப்பவர்கள் சந்தோஷப்படும் அளவிற்கு வழக்கு சாதகமாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களைப் பிடிக்காதவரின் கை தாழ்ந்து உங்கள் கை உயரும்.
வீண் செலவுகளும், தேவையற்ற விரயங்களும் இருக்கும் என்பதை செவ்வாயுடன் ஆறில் இணையும் சுக்கிரன் உணர்த்தினாலும் செலவு செய்வதற்கு ஏற்ப தேவையான வருமானமும் இருக்கும் என்பதை சுக்கிரனின் நிலை உறுதி செய்கிறது. கவலைகளுக்கு இடமில்லை. 15,16 ஆகிய தினங்களில் பணம் வரும். 12-ம்தேதி காலை 9.35 மணி முதல் 14-ம்தேதி காலை 10.43 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும் வேலைகளைச் செய்ய வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசிக்கு சிறப்புகளைத் தரும் வாரம் இது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் ஜெயித்து உங்களுடைய சாமர்த்தியத்தை நிலை நாட்டுவீர்கள். கன்னிக்கு இனி ஒருபோதும் சரிவுகள் இல்லை. இந்த வாரம் இளைய பருவத்தினர் சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். சிலருக்கு தந்தை வழி உறவுகள் மூலம் நன்மைகள் உண்டு. காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். பிள்ளைகளால் நல்ல விஷயங்கள் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் உண்டு.
வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இப்போது ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வார இறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும். தென் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். 12,13 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம்தேதி பகல் 10.43 மணி முதல் 16-ம்தேதி மதியம் 2.43 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் தொல்லைகள் எதுவும் இருக்காது. ஆயினும் மனம் ஒருநிலையில் இருக்காது.
துலாம்:
துலாத்தினருக்கு இது யோகவாரமே. ஒரு குறிப்பிட்ட பலனாக உங்களில் சிலருக்கு இந்த வாரம் முதல் ஐந்தாமிடத்தில் இணையும் சூரிய, சனி சேர்க்கையால், அப்பாவைப் பற்றி அல்லது அவரது ஆரோக்கியத்தைப் பற்றி வருத்தமான சம்பவங்கள் இருக்கலாம். தந்தையின் உடல்நிலையை கவனியுங்கள். இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் வாரம் இது. உங்களில் சிலருக்கு இப்போது இருக்கும் சூழ்நிலை வேலை தொழிலில் சாதகமான பலங்களைச் செய்யும். ராசிநாதன், சுக்கிரன் நான்காம் இடத்தில் பிருகு மங்கள யோக அமைப்பில் இருப்பதும் கூடுதல் நன்மை.
சிலருக்கு எதிர்காலத்தில் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வாரம் நிர்ணயிக்கும். எதிர்ப்புகள் பலவீனமாகும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்கள் உண்டு. அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல வாரமே. 11,12 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி மதியம் 2.43 மணி முதல் 18 -ம்தேதி இரவு 9.54 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.
விருச்சிகம்:
எதிர்ப்புகள் அனைத்தையும் நீங்கள் வெற்றி கொள்ளும் வாரம் இது. மூன்றாம் இடத்தில் மங்கள யோகத்தில் உள்ள ராசிநாதன் செவ்வாயும் சுக்கிரனும், ஆறில் உள்ள குருவும் எதிர்ப்புகள் அனைத்தையும் ஒடுக்கி உங்களுக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள். சிலருக்கு தந்தையிடமிருந்து ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு தேவையான ஒன்றை அப்பா தருவார். வெளிநாட்டு விஷயங்கள் பலன் அளிக்கும் என்பதால் அனைத்தும் இப்போது உங்களுக்கு ஆன்லைன் வழியாக நன்மை தரும். ஒருவரை நேரில் பார்க்காமலேயே அனைத்தையும் முழுமையாக முடித்து லாபம் பெறுவீர்கள்.
அனுஷம் நட்சத்திரத்தினரின் வேதனைகள் தீரப் போகிறது. தெய்வ அனுகூலம் முழுமையாக கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகப் போகிறது. இனி எல்லா நாட்களும் உங்கள் நாட்கள்தான். உங்களில் சிலருக்கு வேலைக்கு செல்லும் மனைவியால் உதவிகளும் தேவைகள் நிறைவேறுதலும் இருக்கும். விருப்பமான வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அடைக்கப்பட்ட அனைத்து கதவுகளும் இனி திறக்கும். நீங்களும் அதை உணருவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லாம் நடக்கின்ற வாரம் இது. வார ஆரம்பத்தில் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இரண்டில் செவ்வாய் உச்சநிலையில் உள்ளதால். தேவையின்றி உங்களுடைய ரத்த அழுத்தம் அதிகமாகும். சிலருக்கு சுற்றியுள்ள நபர்கள் கோபத்தை ஏற்படுத்துவார்கள். பொறுமையும் நிதானமும். தேவைப்படும் வாரம் இது. பெண்களின் மூலமான அனுகூலங்களும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கிடைக்காமல் போன சில விஷயங்களும் இப்போது கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத் துணையால் செலவுகள் இருக்கும்.
வீடு ரிப்பேர், வீட்டை அழகுபடுத்துதல் போன்ற செலவுகள் இருக்கும். வீடு வாகன விஷயங்களில் புதிய மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு ஒரு காரியத்தை நல்லவிதமாக முடித்து பாராட்டுப் பெறக்கூடிய சம்பவங்கள் இருக்கும். சுபத்துவ செவ்வாயால் பொருளாதார மேன்மைகள் இருக்கும். அதிகாரம் செய்யும் பதவியில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரம். சிலருக்கு எதிர்பார்த்த சில விஷயங்கள் கிடைக்காமல் தள்ளிப் போகும். அனைத்து விஷயங்களிலும் பொறுமையை கடைப்பிடியுங்கள். நடுத்தர வயதுக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை விஷயத்தில் சிறப்பான சம்பங்கள் இருக்கும்.
மகரம்:
மகர ராசியை இதுவரை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. எதையும் சமாளித்துக்கொள்ள முடியும் என்கின்ற தன்னம்பிக்கையோடு இப்போது செயல்படுவீர்கள். மகர ராசிக்காரர்களுக்கு இனிமேல் எந்த நிலையிலும். சங்கடங்கள் வராது. தாழ்வு மனப்பான்மை இருக்காது. ராசிநாதன் சனி நல்லநிலையில் இருப்பதும் குறைகள் எதுவும் சொல்ல முடியாத அமைப்பு. அதேநேரத்தில் சுக்கிரன் செவ்வாயுடன் இருப்பதால் பெண்கள் சம்பந்தப்பட்ட விரையங்கள் உண்டு. பெண்களால் மன வருத்தங்களும் இந்த வாரம் இருக்கும்.
முக்கிய பலனாக என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் செய்த உதவியால் இப்போது நல்லபலன்கள் கிடைக்கும். செவ்வாய் சுபத்துவ வலுவாக இருப்பதால் போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ளலாம். பங்கு சந்தை கை கொடுக்கும். சிலருக்கு கோபம் அடிக்கடி வரும். தேவை இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. தாயார், வீடு, வாகனம் வழியில் மன வருத்தங்கள் வரும். வீடு கட்டுபவர்கள் காண்ட்ராக்டர்களிடம் ஏமாற நேரிடும். கவனமாக இருங்கள்.
கும்பம்:
உங்களின் கை தாழ்ந்து உங்களைப் பிடிக்காதவர் கை ஓங்கும் வாரம் இது. ராசிநாதன் சனி, சூரியனுடன் இணைந்து எரிச்சல் நிலையில் உள்ளதால் சிலருக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். சிலருக்கு மருத்துவச் செலவுகள் இருக்கலாம். உச்ச செவ்வாயுடன் இணைந்து. பன்னிரண்டாம் வீட்டில் உள்ள சுக்கிரனால் இப்போது உங்களுக்கு பெண் வழி உறவுகளினால் விரயம் வரும். பெண் உறவுகளில் யாரையாவது நீங்கள் கோபப்பட்டுத் திட்டி அதனால் ஏதாவது எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
குழந்தைகளில் உடல்நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிருங்கள். அவசரம் என்று கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் பின்னால் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம். பணியிடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். பொறுமை தேவைப்படும் வாரம் இது.
மீனம்:
மீன ராசியினர் திருப்புமுனையான நல்ல விஷயங்களை சந்திக்கும் வாரம் இது. அதேநேரத்தில் முப்பதுவயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு விரயச் சனி அமைப்பின் காரணமாக பின்னடைவுகள் வரக்கூடும். அடுத்த வருடம் முதல் மீன ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பிக்க உள்ளதால், இப்போதிருந்தே எதிலும் அகலக்கால் வைக்காமல், புதிய முயற்சிகளைத் தொடங்காமல் கவனத்துடன் இருக்க வேண்டிய வாரமாகவும் இது இருக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
பிள்ளைகள் விஷயத்தில் சிலருக்கு மனவருத்தங்களும் செலவுகளும் இருக்கும். சனி குழந்தைகளின் போக்கில் மாற்றங்களை உண்டு பண்ணுவார் என்பதால் பருவ வயதுக் குழந்தைகளின் மேல் ஒரு கண் வைப்பதும் அவர்களை கண்காணிப்பதும் நல்லது. சிலருக்கு வாழ்க்கைத்துணைவர் விஷயத்தில் சில ஏறுக்குமாறான விஷயங்கள் நடக்கும். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் பொறுத்துப் போவதன் மூலம் எதையும் சமாளிக்கலாம் என்பதால் பொறுத்துப் போங்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :
Post a Comment