மேஷம்:
வைகாசி மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் உச்ச நிலையில் இருப்பதால் இந்த
மாதம் மேஷராசிக்கு யோகமாகவே இருக்கும். செவ்வாயின் உச்சத்தாலும், ராசிக்கு
குருபார்வை இருப்பதாலும் ராசி வலுவடைகிறது. எனவே இந்த மாதம் உங்களுடைய
எண்ணங்கள் யாவும் பலிக்கும். பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை.
பணப்புழக்கம் கையில் இருக்கும். கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும்.
சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்துவந்த தடைகள் நீங்கும்.
வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும்.
திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல்,
கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. சுயதொழில்,
வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல்
சுறுசுறுப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு இந்தமாதம் மிகுந்த நன்மையை அளிக்கும்.
குறிப்பாக மஞ்சள் போன்ற பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.
No comments :
Post a Comment