எட்டுக்குடையவன் ஐந்தில் அமர்ந்து, ராசியில் செவ்வாய் உச்சமாகி, ஏழாமிடத்தில்
ராகுவும் இருப்பது நல்ல நிலையல்ல என்றாலும், புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை
ஆவது அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் என்பதால் வைகாசி மாதம் கவலைப்படத்
தேவையில்லாத மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு
அடித்தளம் போடும் மாதமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள்
எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.
ராசியில் செவ்வாய் பாபத்துவமாக இருப்பதால் நீங்கள் செய்வது தவறாகவே
இருந்தாலும் அதை ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். உங்களின் பிடிவாத குணம்
அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த சிலர்
முயற்சிப்பார்கள். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். பிள்ளைகள் வழியில்
நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும்.
வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளிமாநிலத்தில் படிக்கவோ செல்ல முடியும்.
No comments :
Post a Comment