சிம்மம் :
மாத ஆரம்பத்திலேயே ராசிநாதன் சூரியன் உச்சவலுவுடன் குரு பார்வையோடு
சுபத்துவமாக இருப்பதும், பிற்பகுதியில் பத்தாமிடத்தில் தொழில் ஸ்தானாதிபதி
சுக்கிரனுடன் சுபத்துவமாக இருப்பதும் சிம்மத்திற்கு மே மாதம் மேன்மைகளை
மட்டும் செய்வதைக் காட்டும் ஒரு அமைப்பு. ராசிநாதன் சூரியன் இரண்டு பெரும் சுப
கிரகங்களுடன் சம்பந்தப்படுவதால் இது சிம்ம ராசிக்காரர்கள் வேலை, தொழில்,
வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சாதிக்கும் மாதமாக அமையும்.
மே மாதம்
சிம்மத்திற்கு சிறப்பான மாதம்தான். வேலை, தொழில் விஷயங்களில் சிக்கல்களை
சந்தித்துக் கொண்டிருந்த சிம்மத்தினருக்கு இப்போது வேலையில் நிம்மதி தருகின்ற
அமைப்பும், தொழில் விஷயத்தில் நல்லவைகளும் நடக்கும். முன்னேற்றத்திற்கான
அறிமுகங்கள் உள்ள மாதம் இது. இதுவரை சொந்த வாழ்க்கையிலும், தொழில் அமைப்புகளிலும், பின்னடைவுகளையும்,
குழப்பங்களையும் மட்டும் பார்த்தவர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றங்களையும்,
சந்தோஷத்தையும் தரும். தடைகள் விலக ஆரம்பிக்கும். குறிப்பாக பெண்கள்
விஷயத்தில் நன்மை நடக்கும்.
யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும்
காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். ஐந்தில் சனி இருப்பதால்
பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். அவர்களுக்கானதை செய்வதில் தடை
இருக்கும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. சிலருக்கு புரிந்து
கொள்ளாத பிள்ளைகளால் தகப்பன், மகன் விரோதம் வரும். இனிமேல் வராது என்று கை
விடப்பட்ட பணம் கிடைக்கும். பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில்
இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்த வாரம்
யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம்
கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். குலதெய்வவழிபாடு
செய்யாதவர்கள் செய்யும்படி இருக்கும். பணியிடங்களில் வில்லங்கம் மற்றும்
வழக்கு இருப்பவர்கள், திருமணம் தாமதமாகி கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம்
நல்ல செய்திகள் உண்டு.
2,9,10,15,17,18,19,25,26,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 11 ம் தேதி காலை
7.11 மணி முதல் 13ம் தேதி மதியம் 1.31 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ
சண்டையோ செய்யாதீர்கள்.
No comments :
Post a Comment