மிதுனம்:
மாதத்தின் பெரும் பகுதி நாட்கள் ராசிநாதன் புதனும், யோகாதிபதி சுக்கிரனும்
எட்டில் மறைகின்ற மாதம் இது. மிதுன ராசிக்காரர்களின் சிலர் இந்த
மாதம்
ரகசியமான சில வேலைகளை செய்து அதில் வெற்றி பெறுவீர்கள். மனதில் இருப்பதை
பிறருக்கு காட்டாமல் வேலைகளை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனத்தினரின் திறமைகள் வெளிப்படுகின்ற மாதம் இது. உங்கள் செயல்களின் மூலம்
எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வெற்றி கொள்வீர்கள். பிரச்னைகளை சமாளிக்கும்
தைரியம் உண்டாகும்.
ராசியை செவ்வாய் பார்ப்பதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது கண்டிப்பாக
அவசியம். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் என்பதால்
எதிலும் நிதானமாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் வருவதற்கு
வாய்ப்பு இல்லை. குருவின் பலத்தால் பணக் கஷ்டங்கள் இருக்காது. வெகுநாட்களாக
இழுத்தடித்துக் கொண்டிருந்த அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் தற்பொழுது
முடியும். வேற்றுமத நண்பர்கள் இப்போது கை கொடுப்பார்கள். தெய்வதரிசனம்
கிடைக்கும்.
கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண் வாக்குவாதங்களை
தவிருங்கள். ஐந்தாமிடம் வலுப் பெறுவதால் பிள்ளைகள் உங்களுக்கு பெருமை தேடித்
தருவார்கள். பிள்ளைகளுக்குரிய கடமைகளை நீங்கள் சரியாக செய்ய முடியும். மாதம்
முழுவதும் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். எவரையும் நம்பி மனதில் உள்ளதை
வெளிப்படையாக பேச வேண்டாம். சிலருக்கு பழைய கடனை அடைக்க புதிய கடன்கள் வாங்க
வேண்டியிருக்கும். வியாபாரிகள் மேன்மை அடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு
முன்னேற்றமான திருப்பங்கள் நடக்கும். பெண்களை மேலதிகாரியாக கொண்டவர்களுக்கு
அவர்கள் மூலம் நன்மை உண்டு.
2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம் தேதி இரவு 7.52 முதல்
13-ம் தேதி காலை 8.48 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய
முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும்
நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும்
வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது.
No comments :
Post a Comment