துலாம்:
2, 9, 11-க்குடையவர்கள் வலுப்பெற்று தனயோகம் கிடைக்க இருக்கும் மாதம் இது.
துலாம் ராசிக்காரர்களுக்கு பணம் வருகின்ற அமைப்புகள்
அனைத்தும் வலுவாக
இருப்பதும் மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் பவுர்ணமிச் சந்திரனின்
பார்வையில் இருப்பதும், ராசியிலேயே இன்னொரு ஒளி கிரகமான குருபகவான் இருப்பதும்
உங்களை தேஜசுடன் இருக்க செய்யும் அமைப்பு என்பதால் பிப்ரவரி மாதம் துலாம்
ராசிக்கு இருளை அகற்றி வெளிச்சம் காட்டுகிற மாதமாக இருக்கும்.
கெடுதல்கள் எதுவும் இல்லாத நன்மையான மாதம் இது. பிரிந்தவர்கள் ஒன்று
கூடுவீர்கள். நீண்டநாள் பார்க்காத நண்பர்கள் உறவினர்களை இந்த மாதம் பார்த்து
மனம் மகிழ உரையாடுவீர்கள். புதிய வீடு வாங்குவீர்கள். சிலர் இருக்கும் வீட்டை
மேம்படுத்துவீர்கள் புதிய நல்ல வாகனம் அமையும். வசதிக்குறைவான வீட்டில்
இருப்பவர்கள் வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி
நிலவும். வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். பிரச்சினைகள் எதுவும் கிட்டே
வராது. எதிலும் வெற்றி கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களும் வலிய வந்து
உதவுவார்கள்.
வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி கிடைக்க வாய்ப்பு
இருக்கிறது. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். குறிப்பிட்ட சிலர் புகழ்
அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். அந்தஸ்து கௌரவம் உயரும்படியான
சம்பவங்களும் குடும்பத்தில் மனமகிழ்ச்சியான நிகழ்ச்சிகளும் இருக்கும். இதுவரை
நிறைவேறாத எண்ணங்கள் நிறைவேறும். கணவன் மனைவி பூசல்கள் எதுவும் இருக்காது.
ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். உடல்நலம் மனநலம் திருப்திகரமாக
இருக்கும்.
2,3,8,9,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம் தேதி மதியம் 2.02 முதல்
22-ம் தேதி இரவு 7.23 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில்
புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம்
அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள்
எதையும் எடுக்க வேண்டாம்.
No comments :
Post a Comment