ரிஷபம்:
மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி வலுவில் சிறப்பாக உள்ளதாலும்,
ராசிக்கு குருபார்வை இருப்பதாலும் ரிஷப ராசிக்கு இது சந்தோஷங்களைத் தரும்
மாதமாக இருக்கும். குறிப்பாக வாழ்க்கையில் இதுவரை செட்டிலாகாத இளைய
பருவத்தினருக்கு இப்போது நல்ல மாற்றங்கள் நடைபெறும். முப்பது வயதுகளில்
இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் மாற்றங்களைச் சந்திப்பீர்கள்.
சாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு தொழில்
விஷயங்களில் முன்னேற்றமான நிலைமைகள் இருக்கும்.
அதேநேரத்தில் அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அனாவசியமாக எவரையும்
பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம். அனைத்து
விஷயங்களிலும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது. ஏழில் சனி
உள்ளதால் சிலருக்கு தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து
வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும்
இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து
விடுபடலாம்.
சிலருக்கு மாத பிற்பகுதியில் நல்ல பலன்கள் இருக்கும். முற்பகுதியில் சிறிது
அலைச்சல்கள், காரியத் தடங்கல்கள் இருந்தாலும் மாதம் முடிந்த பிறகு அனைத்தும்
நல்லவிதமாக முடிவுக்கு வரும். கோவிலுக்கு போவதும் நேர்த்திக் கடன்களை
நிறைவேற்றுவதும் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் உண்டு.
குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு
இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் உற்சாகமாக
ஈடுபடுவீர்கள். சிலர் நல்ல வீட்டில் குடி போவீர்கள். பணவரவு இருக்கும்.
பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நன்மைகளை
அடைவீர்கள் திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றங்கள்
உண்டு.
5,6,7,10,11,16,18,19,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 7 -ம்தேதி காலை 11.21
மணி முதல் 9 -ம்தேதி இரவு 11.24 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
நீண்டதூர பிரயணங்களோ எந்த ஒரு புதியமுயற்சியோ இந்த நாட்களில் செய்வதை தள்ளி
வைப்பது நல்லது.
No comments :
Post a Comment