விருச்சிகம்:
ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் இருந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். மாத
ஆரம்பத்தில் அவருடன் ஜீவனாதிபதி சூரியன் உச்சமாக இருப்பதும் ஒரு நல்ல அமைப்பு
என்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த நான்கு வருட காலமாக இருந்து வந்த
பின்னடைவான அமைப்புகளும், மன அழுத்தங்க்களை தந்த விஷயங்களும் விலகுகின்ற மாதம்
இது.
கடுமையான போராட்டம் நிறைந்த சம்பவங்களாலும், ஏமாற்றங்களினாலும் என்ன செய்வது
என்று தெரியாமல் துவண்டு போய் இருக்கும் கேட்டை நட்சத்திரகாரர்களுக்கு
தெம்பையும், புத்துணர்வையும் தரக்கூடிய நல்ல மாற்றங்கள் இந்த மாதம் நடக்கும்.
கடந்த சில வருடங்களாக எந்த நல்லவைகளும் நடக்காத இளைய பருவ விருச்சிக
ராசிக்காரர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும் மாதமாகவும் மே மாதம்
இருக்கும். உங்கள் திறமைகள் வெளிவரும் மாதம் இது. குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம்
கை கொடுக்கும். முக்கியமான சில பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள்.
என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட
மாட்டார் என்பது இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும்.
ராசிநாதன் பலம் பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக
இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த மாதம் சில நல்ல அனுபவங்கள்
இருக்கும்.. அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக் கூடிய சந்தர்ப்பங்கள்
அமையும். சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள்
போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் எந்த
வித பாதிப்பும் இல்லாமல் நல்ல விதமாக நடக்கும். அரசுப்பணியாளர்கள், சிகப்பு
நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்
துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவீர்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில்
செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் உண்டு.
2,5,6,10,15,19,20,26,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 27 ம் தேதி காலை 7.34
மணி முதல் 29 ம் தேதி காலை 7.53 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய
முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ
செய்யாதீர்கள்.
No comments :
Post a Comment