மகரம்:
மகர ராசிக்கு மாற்றங்களின் ஆரம்பங்கள் துவங்க இருக்கும் மாதம் இது. இந்த மாதம்
நடைபெற இருக்கும் ஒரு சம்பவத்தினால் நீங்கள் எதிர்காலத்தில் எந்த துறையில்
இருக்க போகிறீர்கள் என்பதை அடையாளம் கண்டு கொள்வீர்கள். குறிப்பிட்ட சில
மகரராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு
கிடைக்கும். வேலை தொழில் செய்யும் இடங்களில் சங்கடங்களோ விரயங்களோ இருக்கும்
என்பதால் மகரத்தினர் சிக்கனமாகவும் பொது இடங்களில் வீண் விவாதத்தை தவிர்க்க
வேண்டிய மாதமாகவும் இது இருக்கும்.
முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான
மாற்றங்களை இப்போது சந்திப்பீர்கள். நான்கில் செவ்வாய் சூரியனுடன் இணைவதால்
எரிச்சலும், ஏமாற்றங்களும் கலந்த மாதமாகத்தான் இது இருக்கும். சிலருக்கு
பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக
இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை.
கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள்.
கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டுத்துறையினர்,
கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்தமாதம் திருப்புமுனையாக
அமையும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். குலதெய்வதரிசனம்
கிடைக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள்
இருக்கும். ராசிக்கு குருபார்வை இருப்பதால் எவ்வித எதிர்மறைபலன்கள் நடந்தாலும்
அவை அனைத்தும் சூரியனை கண்ட பனி போல உடனே மறைந்து கெடுதல்கள் எவையும் உங்களை
அணுகாது என்பது உறுதி.
2,5,9,11,13,15,17,18,22,28, ஆகிய நாட்களில் பணம் வரும். 4 ம் தேதி அதிகாலை
4.28 மணி முதல் 6 ம் தேதி மதியம் 12.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
புதிய முயற்சிகளோ, நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். இந்த நாட்களில் மனம் ஒரு
நிலையில் இருக்காது என்பதால் யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
No comments :
Post a Comment