கடகம்:
மாத ஆரம்பத்திலேயே ராசிநாதன் சந்திரன் குருவின் பார்வையில் அமர்ந்து கஜகேசரி
யோகம் உண்டாவதும், பத்துக்குடைய ஜீவனாதிபதி ஆட்சி வலுப்பெற்று தொழில்
ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் தொழில்துறையில் இதுவரை கடக ராசிக்காரர்களுக்கு
இருந்து வந்த போட்டிகளையும், எதிர்ப்புகளையும் ஜெயிக்கும் நிலையை குறிப்பதால்
இந்த மாதம் கடகத்தினர் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சாதனை
புரியும் மாதமாக இருக்கும்.
இந்த மாதம் கடகத்தின் அனைத்து பிரச்சினைகளும், கஷ்டங்களும் முடிவுக்கு வரும்
மாதமாக விடியும். எதிர்கால முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் நடைபெறும். ஒரு
சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு
வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும்.
இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள்
இனிமேல் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும்.
இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம்
சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று
கூடுவீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து
கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை,
ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும். கடன் தொல்லைகளைத்
தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.
தனலாபாதிபதிகள் வலுவாக இருப்பதால் தாராளமான பணவரவு இந்த மாதம் இருக்கும்.
வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி
உறவினர்கள் உதவுவார்கள்.
5,6,7,8,9,17,18,19,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம் தேதி அதிகாலை 5
மணி முதல் 27-ம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில்
புதிய முயற்சிகள், முதலீடு எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம்
ஆகும் நபர்கள் பின்னாளில் உங்களுக்கு தலைவலியை தரக்கூடியவர்களாக இருப்பார்கள்.
No comments :
Post a Comment