கும்பம்:
ராசி வலுப்பெற்றால் நன்மைகள் உண்டு எனும் விதிப்படி ராசிநாதன் சனிபகவான்
சுபத்துவத்துடன் பதினொன்றில் அமர்ந்து தனது வீடான உங்கள் ராசியைப் பார்த்து
வலுப்படுத்துவதால் இனிமேல் கெடுபலன் அமைப்புகள் அனைத்தும் கும்பராசிக்கு
விலகத் தொடங்கும் என்பது நிச்சயம். இந்த மாதம் நீங்கள் நினைத்தது நிறைவேறும்
மாதமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலக
ஆரம்பிக்கும். இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது.
அக்டோபர் மாதம் நடைபெறப்போகும் சனிப்பெயர்ச்சி அற்புதமான பலன்களை உங்களுக்கு
தரும் என்பதல் நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே
ஆரம்பிக்கத் துவங்கும்.
ராசியில் கேது இருந்து சனி பார்வை பெறுவதால் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக
ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும்
வாய்ப்பு கிடைக்கும். சிவத்தொண்டு செய்வீர்கள். கலைஞர்களுக்கு இது நல்ல மாதமாக
அமையும். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம்.
வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று
அதிகமாக இருக்கும். தந்தைவழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும்.
இதுவரை நல்ல வேலை கிடைக்காத இளையபருவத்தினர் இந்த மாதம் மனதிற்கு பிடித்த
வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள்
கிடைக்கும். சுயதொழில் செய்பவருக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் உண்டு.
பிள்ளைகளால் சுபச்செலவுகளோ, வீட்டில் விஷேசங்களோ இருக்கும். மனம்
புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.
1,5,7,8,9,19,20,21,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம் தேதி அதிகாலை 12
மணி முதல் 15-ம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட
நாட்களில் எவருக்கும் ஜாமின் கையெழுத்து போடுவது கூடாது. இந்த நாட்களில் வீண்
வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
No comments :
Post a Comment