மகரம்:
மாத ஆரம்பத்தில் சுக்கிரனிடமிருந்து விலகி நான்காமிடத்திற்கு செவ்வாய்
மாறுவதும், தர்மகர்மாதிபதிகளான புதனும், சுக்கிரனும் மாதம் முழுவதும் யோகம்
தரும் அமைப்பில் இருப்பதும் மகரராசிக்கு லாபங்களையும், பண வரவுகளையும் தர
வைக்கும் என்பதால் மார்ச் மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான். சிறப்பு பலனாக
இந்தமாதம் தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும்.
விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில்
சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும்.
பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும்
பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. சிலருக்கு இப்போது எதிர்பாராத பணவரவு
இருக்கும். வருட இறுதியில் ஏழரைச்சனி ஆரம்பிக்க இருப்பதால் எதிர்கால
முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் இந்த மாதம் உண்டு. சிலருக்கு அடிப்படை
அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு வீடுமாற்றம், தொழில்
இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். நாற்பது வயதிற்கு
மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
சனி இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக
இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை
செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். பணவரவுகள் இந்தமாதம் நன்றாக இருக்கும்
என்பதால் சிக்கனத்தை கடைப்பிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால்
விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
2,3,4,5,6,7,18,19,20,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம் தேதி மாலை 5 மணி
முதல் 13-ம் தேதி அதிகாலை 12 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட
நாட்களில் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.
இந்த நாட்களில் மனம் ஒரு தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் இஷ்ட தெய்வ
வழிபாட்டை செய்வது நல்லது.
No comments :
Post a Comment