மேஷம்:
மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சியாக இருப்பதும் மாத
நடுவில் யோகாதிபதி சூரியன் குருவின் பார்வையில் வருவதும் மேஷத்திற்கு நன்மை
தரும் அமைப்புகள் என்பதால் மார்ச் மாதம் மேஷத்திற்கு மங்களங்களை தரும் மாதமாக
இருக்கும். குறிப்பாக அதிசார நிலையில் சனிபகவான் எட்டில் இருந்து விலகி
விட்டதால் இனிமேல் மேஷத்திற்கு தொல்லைகள் எதுவும் இருக்காது.
பணவரவிற்கு காரணமான சுக்கிரன் மாதம் முழுவதும் உச்சநிலையில் இருப்பது இந்த
மாதம் உங்களுக்கு நல்ல பண வரவு இருக்கும் என்பதை காட்டுவதால் பணம் இருந்தால்
எதையும் சமாளிக்கலாம் எனும் விதிப்படி மேஷ ராசிக்காரர்கள் பணவரவால்
அனைத்தையும் வெற்றிக்கொள்ளும் மாதமாக இது இருக்கும். அதேநேரத்தில் இருவேறு
எதிர் கிரக நிலைகளை கொண்ட மாதமாகவும் மார்ச்மாதம் இருப்பதால் அனைத்து
விஷயங்களிலும் நன்மைகளும் தீமைகளும் கலந்து நடப்பதோடு தீமைகள் அனைத்தையும்
ராசிநாதன் வலிமையால் சமாளித்தும், ஜெயித்தும் காட்டுவீர்கள் என்பதை மார்ச்
உறுதி செய்கிறது.
ஆறாமிடம் வலுப்பெறுவதால் குடும்பத்தில் ஏற்படும் சிறிய கருத்து
வேற்றுமைகளுக்கு விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண் வாக்குவாதங்களை
தவிருங்கள். ஐந்தாமிட ராகுவால் பிள்ளைகள் விஷயத்தால் கணவன் மனைவி இடையே
கருத்து வேறுபாடு வருவதற்கு இடம் இருக்கிறது. அது வராமல் இருக்கக்கூடிய
முயற்சிகளை தம்பதிகள் எடுத்துக் கொள்வது நல்லது. அடுத்தவருக்கு கொடுக்கும்
வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகும். எனவே பேச்சில் கவனமாக இருங்கள்.
குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இந்த நேரங்களில் நிறைவேற்ற
முடியும்.
1,3,5,6,7,9,18,19,20,23,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ம் தேதி இரவு 9 மணி
முதல் 20-ம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் வேலை,
தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் ரிஸ்க் எடுக்கும் விஷயங்களை செய்ய
வேண்டாம். புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பிக்காமல் இருப்பதும் நல்லது.
No comments :
Post a Comment