கடகம்:
கடகத்தினர் இந்த மாதம் எந்த ஒரு விஷயத்தையும் அவசரப்படாமல் நிதானமாக
முன்னெச்சரிக்கையுடன் செய்ய வேண்டிய மாதமாக இருக்கும். அதே நேரத்தில் ராசியின்
யோகாதிபதியான செவ்வாய்க்கு குருபார்வை இருப்பதால் எந்த கெடுதல்களும் உங்களை
அணுகாது. இந்த மாதம் வேலை, தொழில் விஷயமாக பிரயாணம் செய்ய வேண்டிய மாதமாகவும்,
அதனால் பிரயோஜனம் உள்ள மாதமாக இருக்கும்.
செலவுகள் இருக்கும் என்பதால் வருமானமும் நன்றாக இருக்கும். எல்லோருக்கும்
எல்லோரும் கடன் தரமாட்டார்கள். கடன் வாங்குவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்
என்பதால் செலவு செய்வதற்கு கடன் வாங்காமலேயே வருமானம் வரும். தொழில் சிறப்பாக
இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
குருவின் பலத்தால் பணத்தால் கஷ்டங்கள் இருக்காது. சிலருக்கு வெகுநாட்களாக
இழுத்தடித்துக் கொண்டிருந்த அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் தற்பொழுது
முடியும். வேற்றுமத நண்பர்கள் இப்போது கை கொடுப்பார்கள்.
ஸ்டேஷனரி, புக்ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும்,
அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் முன்னேற்றமாக
இருக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில்
சுப காரியங்கள் நடக்கும். அம்மாவழி ஆதரவு இப்போது பரிபூரணமாக உண்டு. தாய்வழி
சொந்தங்கள் உதவுவார்கள். மூத்த சகோதரிகளால் லாபம் இருக்கும். நீங்களும்
அவருக்கு உதவ முடியும். சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு
இந்த மாதம் திடீர் லாபம் உண்டு. எவரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். எதையும்
ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்து செய்யுங்கள்.
1,3,7,8,9,11,12,16,17,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம் தேதி இரவு 7 மணி
முதல் 28-ம் தேதி அதிகாலை 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட
நாட்களில் புதிய முயற்சிகள், அறிமுகங்கள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல்
இருப்பது நல்லது. வாழ்க்கையை மாற்றும் முடிவுகள் எதையும் இந்த நாட்களில்
எடுக்க வேண்டாம்.
No comments :
Post a Comment