மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெற்ற நிலையிலும், நட்பு நிலையிலும் இருப்பதால் ரிஷபராசிக்காரர்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் மாதமாக ஜூன் மாதம்
இருக்கும். அதேநேரத்தில் இருபெரும் பாவக்கிரகங்களான செவ்வாயும், சனியும் ஏழாமிடத்தில் இருந்து ராசியை பார்ப்பதால் உங்களில் சிலர் வாழ்க்கைத்துணை நண்பர்கள்,
பங்குதாரர்கள் போன்ற இடங்களில் ஏமாற்றங்களையும், வேதனைகளையும் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சிலருக்கு எரிச்சலும், கோபமும் வரக்கூடிய
சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இவை அனைத்தும் வருகின்ற ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு அடியோடு நீங்கி அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நல்ல விதங்களில் நடக்க இருக்கின்ற
ஆரம்பமாதமாக ஜூன் மாதம் இருக்கும். அதேநேரத்தில் ராசியை சனி செவ்வாயுடன் இணைந்து பார்ப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம்.
குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும்.
பணவரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அரசு, தனியார்துறை
ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக
திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு உடனடியாக திருமணம் உறுதியாகும்.
2,4,5,6,7,11,12,13,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம்தேதி அதிகாலை 6 மணி முதல் 22-ம்தேதி பகல் 2.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில்
நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பதும், அறிமுகமில்லா ஆட்களிடம் தேவையின்றி விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதும் நல்லது.
No comments :
Post a Comment