கடகம்:
கடகராசிக்கு யோகாதிபதியான செவ்வாய் ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதால் இந்தமாதம் பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷப்படும்படியான சம்பவங்களும்
அவர்களால் பெருமைகளும் இருக்கும். சிலருக்கு வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும். இதுவரை தொழில் விஷயங்களில் இருந்து வந்த
தடங்கல்களும் முட்டுக்கட்டைகளும் இந்த மாதம் முதல் விலகும்.
உங்களுடைய அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன் மேலோங்கிய நிலையில் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளும் சிறப்பாக நடைபெறும். ஆறுக்குடைய
குருபகவான் ஆறாமிடத்தைப் பார்ப்பதால் உடல்நல விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிறு ஆரோக்கியக் குறைவு என்றாலும் கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.. நீண்ட
நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும் சிறப்புகளைச்
சேர்க்கும்.
சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை
வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. விவசாயிகள், மக்கள்
பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் மட்டும்
சற்று கசப்புகள் இருக்கும். பொறுத்துப் போவது நல்லது.
2,9,10,15,17,18,19,25,26,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 1ம் தேதி காலை 9 மணி முதல் 3ம் தேதி மதியம் 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ
நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
No comments :
Post a Comment